Tuesday, 26 February 2013

புதிதாக முளைத்துள்ள ''திராவிட பயங்கரவாதம்'' என்ற பேராபத்து

"திராவிடப் பயங்கரவாதம்" என்ற சொல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. திராவிட என்ற சொல் இங்குப் பெரியாரிய கொள்கைகளைப் பின்பற்றுகின்றவர்களைக் குறிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று பெரியாரின் மீது விமர்சனத்தையும், போரையும் தொடுக்க வேண்டிய கட்டாயம் ஏன் எழுந்துள்ளது என்பதை முன்னதாகவே பார்த்தோம். பழமைவாதங்களைத் தக்க வைக்க விரும்பும் பாசிச, நாசிச கொள்கைகளைக் கொண்ட இந்துத்வா, இஸ்லாமிய மற்றும் சாதிகளைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் தமிழர்கள் பலருக்கும் கிலி உண்டாக்கும் ஒரு மந்திரச் சொல் பெரியார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

தமிழர்கள் ஒடுக்கப்பட்டுப் பார்ப்பனியர்களின் கைகளில் சிக்கிக் கொண்டது. இனி மீளவே முடியாது என்ற சூழலில் தமிழகம் இருந்தது. இந்த நிலையில் தான் பெரியார் எனப்படும் ஈரோடு வேங்கடசாமி ராமசாமி என்பவர் தமிழக வரலாற்றுக்குள் புகுந்தார். குறிப்பாகத் தமிழர்கள் மத்தியில் இருந்த தீண்டாமையை ஒழிக்கப் பெரியாரின் காலத்துக்கு முன் சிலர் கிறித்தவம், பவுத்தம், இஸ்லாம் ஆகியவற்றுக்கு மதம் மாறினார்கள். ஆனால் அவை யாவும் வெற்றியளிக்கவில்லை. தீண்டாமையும் ஒடுக்குமுறையும் புதிய புதிய வடிவில் தொடரவே செய்தன. இந்த நிலையில் தான் பகுத்தறிவு, திராவிடப் பெருமிதம் போன்றவைகள் ஊடாகத் தாழ்வு மனப்பான்மையில் வாழ்ந்த தமிழர்களைக் கிளர்ந்தெழச் செய்தார். இந்தக் கிளர்ச்சியானது வன்முறைகளைக் கொண்டதல்ல, எங்கும் குண்டு தாக்குதல்கள் நடத்தியது இல்லை, போர்களில் ஈடுபட்டதில்லை, இனப் படுகொலைகள் செய்ததில்லை, பழமைவாதங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்டதல்ல என்பதை இன்று ''திராவிடப் பயங்கரவாத'' எனப் பேசுவோர் உணர்தல் வேண்டும். 

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை ஒடுக்கியும், புறக்கணித்தும் வாழ்ந்து வந்தவர்கள் பார்ப்பனர்கள் ஆவார்கள். அவர்களுக்கு ஒத்தூதி வந்தவர்கள் இதர ஆதிக்கச் சாதியினர். இவர்களை எதிர்க்க வேண்டும் என்றால் சாதியத்தின் பிறப்பிடமான வருணாசிரமத்தையும், அதில் இருந்து தோன்றிய இந்து மதத்தையும் எதிர்க்க நினைத்தவரே பெரியார். ஆனால் பெரியார் செய்த ஒரு தவறு இந்து மதத்தை எதிர்க்க நினைத்து ஆரம்பக் காலங்களில் இஸ்லாம், கிறித்தவ மதங்களைப் போற்றினார். இன்று எல்லாப் பாம்புகளும் சேர்ந்து கொண்டு பார்ப்பன பாசம் பேசுவதைப் பெரியார் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார் என்றே தோன்றுகின்றது. இருந்த போதும் அவர் தன்னை இறைத்தூதர் என்றோ, தீர்க்கத்தரிசி என்றோ கூறியவர் இல்லையே. தன்னை மனிதனாகக் கூறியவர், ஒரு தனி மனிதனாக இத்தனை கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது நிச்சயம் ஒரு மாபெரும் சாதனையே. 

பிப்ரவரி 17-18, 1929-யில் பெரியார் தலைமையில் நடத்தப்பட்ட சுய மரியாதை மாநாடு என்பது தான் தமிழகத்தின் சிந்தனையாக்கத்தை வேறு திசையில் திருப்பியது எனலாம். இன்று தமிழக இந்துக்கள் மதவெறியர்களாக இல்லாமல் இருந்தமைக்குப் பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பு மிக முக்கியமானது. 

அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களான வருணப் பாகுப்பாட்டை ஒழிப்பது, தீண்டாமையை ஒழிப்பது, புரோகித முறைகளை ஒழிப்பது, வடமொழி ஆதிக்கத்தை ஒழிப்பது, பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பது, கோவில்கள், வேத பாடசாலைகளுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்துவது, பெயர்களிலோ, உடலிலோ சாதிய அடையாளங்களை நீக்குவது என்பவை ஆகும். அத்தோடு கல்வி, வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டன. 

இந்தத் தீர்மானங்களில் பல வெற்றிகளையும் அவர்கள் கண்டார்கள். இருந்த போதும் அவருக்குப் பின்னால் வந்த திராவிட அரசியல் பேசுவோர் எல்லோரும் எவ்வாறு பெரியாரின் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்து மீண்டும் மதம், சாதியம் சார்ந்த பழமைவாதங்களை எழுச்சியடையச் செய்கின்றார்கள் என்பதை நன்கு உணரலாம். இங்குத் தான் உள்ளது பெரியார் மீதான திடிர் விமர்சனங்கள் எழுவதன் காரணம். 

பெரியார் பிராமணியத்தைக் கடுமையாக எதிர்த்தார் என்பதை நாமறிவோம். ஆனால் முகம்மது நபி யூதர்களான பானு குரைசிகளைப் படுகொலை செய்து, கொள்ளையடித்து, அவர்களது பெண்களைக் கைப்பற்றியது போலச் செய்யவில்லையே. அன்று தொடங்கப்பட்ட முகம்மதுவின் பணி இன்று வரை நீள்கின்றதே, எது மெய்யான பயங்கரவாதம் என்பதை மக்கள் உணர்வார்கள். 

பிராமணியம் மண்ணின் மைந்தர்களான பவுத்தர்களையும், சமணர்களையும் கழுவில் ஏற்றிக் கொன்றும், கொள்ளையடித்தும் விரட்டியதைக் கூடப் பெரியார் செய்திருக்கவில்லை. சொல்லப் போனால் பெரியாரின் உற்றத் தோழராக இருந்தவர் ராஜகோபாலாச்சாரி என்ற பிராமணரே. அரசியல், கொள்கைகள் என அனைத்திலும் மாற்றுக் கருத்துடைய ராஜாஜியே கடைசி வரைக்கும் நீதி ஆலோசகராகவும் இருந்திருக்கின்றார். 

பெரியார் பார்ப்பனியத்தைத் தான் வெறுத்தாரே ஒழிய, பார்ப்பனர்களை அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  கோவிக் கண்ணன் எழுதியது போல பெரியாரின் பார்பன வெறுப்பு என்பது பார்பனர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் அகற்றப்பட வேண்டும், பார்பனர்களின் தீண்டாமைக் கொள்கை அழித்தொழிக்கப்பட வேண்டும், அவர்களால் கதைக்கப்படும் மூட நம்பிக்கைகள், மனுதர்மம், வருணாசிரமக் கோட்பாடுகள் அழிக்கப்பட வேண்டும் என்பதே, மற்றபடி பார்பனர்களை தமிழ் நாட்டை விட்டே துறத்துங்கள் என்று அவர் சொல்லி இருக்கவில்லை.

பெரியாரின் கொள்கைகளோடு இன்றைய தமிழ் பகுத்தறிவாளர்களுக்குப் பல மாற்றுக் கருத்துக்கள் உள்ளது என்ற போதும், தமிழகத்தினை மீட்டுப் பகுத்தறிவுப் பாதைக்கு இட்டுச் சென்றவர் பெரியார் என்பதையும், அவரது பல கருத்துக்கள் தமிழகத்தின் வாழ்க்கைப் பாதையை மாற்றி வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றது என்பதையும் மறக்கக் கூடாது. இன்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கூடத் தமிழகத்தில் அரசியல் செய்யத் திராவிடம் என்ற சொல் தேவைப்படுகின்றது. ஏனெனில் திராவிடம் என்ற சொல்லில் மக்களின் ஆழ்மனங்களில் ஒரு வித நம்பிக்கை உண்டு என்பதால் தான். 

பெரியார் ஒரு மோசமான மனிதராக இருந்திருந்தால் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் விருது வழங்கியது மட்டுமில்லாமல்,  "புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கி இருக்குமா என்ன. 

ஆனால் வெறும் பெயரளவில் திராவிடம் பேசுவோரை நம்பி தமிழகம் நீண்ட காலம் பயணிக்க முடியாது. ஏற்கனவே RSS, பஜ்ரங்க தளம் போன்றவை பாரதிய ஜனதாகக் கட்சியின் ஊடாகக் கால் பதிக்க முயன்று வருகின்றன. இஸ்லாமோ-பாசிச வாத கட்சிகள் தமது அராபிய ஏகாதிபத்தியத்தைத் தமிழ் மண்ணில் விதைக்கக் கிளம்பியுள்ளன. மறைந்துக் கிடந்த வருணாசிரம பிரிவினைகள் பாட்டாளி மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கொங்கு முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் எனப் பற்பல சாதிக் கட்சிகளாக உருமாறி சாதியத்தை விதைக்க முற்படுகின்றன. 

என்ன ஒரே ஆறுதல் இன்றைய இளைஞர்கள் பன்னாட்டு அளவில் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள், மதங்களை வெறுக்கத் தொடங்கியுள்ளார்கள், உலகப் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை முறையில் சாதி, சமயம், இனவாதத்துக்கு முக்கியம் கொடுக்காமல் சுய வாழ்க்கை முன்னேற்றத்தை விரும்புகின்றார்கள். ஆகையால் இத்தகைய நவீன இளையவர்களிடம் பகுத்தறிவுக் கருத்துக்களை கொண்டு சென்றால், அவர்களிடம் பழைமைவாத பாட்சா பலிக்காது என்றே நினைக்கின்றேன். மூளைச் சலவை செய்யப்படும் அப்பாவிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் நம்மிடம் இருக்கின்றது.

* மணியம்மையார் ஒரு பார்ப்பனர் என்று நான் முன்னதாக எழுதியது குறித்து எவ்வித ஆதாரமும் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால், அதன் பத்திக்களை நீக்குகின்றேன். தவறுகளுக்கு கோடங்கி சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்... 

62 Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இதில் தவறு இருப்பதாக நான் அறியவில்லை. மணியம்மையரை பாலுறவுக்காக அவர் மணக்கவில்லை, தமது சொத்துக்களை நல்ல ஒருவரிடம் விட்டுச் செல்லவும், திராவிட இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவுமே அவர் அவ்வாறு செய்தார். அத்தோடு அக்காலக் கட்டத்தில் திராவிட கொள்கைகளில் முழு பங்காற்றியவரும் மணியம்மையார் ஆவார். இதில் தவறு என்ன இருக்கு என்பதை நான் அறியவில்லை... ! பார்ப்பனர்களை எதிர்ப்பது என்பது பார்ப்பனத்தை எதிர்ப்பது மட்டுமே, பார்ப்பனியத்தை துறந்த பார்ப்பனர்களை எதிர்ப்பதல்ல. ஆகையால் உங்களது கருத்தோடு நான் மறுத்தலிக்கின்றேன்.

      Delete
  2. //மணியம்மையாரை பெரியார் நம்பினார். மணியம்மையாரும் ஒரு பார்ப்பன பெண் என்பதாவது இன்றுள்ள அறிவுக் குஞ்சுகளுக்குத் தெரியுமா என்பது தான் வியப்பே.///
    மணியம்மையாரும் பிராமணப் பெண்ணா? தமிழ்நாட்டுத் தமிழர்களின் வெள்ளைத்தோல் ஆசை பெரியாரையும் விட்டு வைக்கவில்லை என்பது எனக்கு இதுவரை தெரியாது. நான் இவ்வளவு நாளும் எம்‌ஜி‌ஆர் மட்டும் தான் பார்ப்பனப்பெண்ணை விரும்பினார் என்று நினைத்தேன் ஆனால் பெரியாருக்குக் கூட தனது சொத்துக்களை நம்பி விட்டுப் போவதற்கு ஒரு தமிழ் அல்லது திராவிடப் பெண் கிடைக்கவில்லை. பல திராவிடத் தலைவர்களும்,(தொண்டர்களும் கூட) தமிழர்கள் இப்படித்தான், வெளியில் பார்ப்பன எதிர்ப்பு பேசுவார்கள் ஆனால் அவர்களின் மனைவி, மருமக்கள், ஏன் பேரப்பிள்ளை, பூட்டப்பிள்ளைகளின் மனைவிமார் கூடப் பார்ப்பனப் பெண்கள் தான். அபப்டியானால் திராவிட தலைவர்களின் பார்ப்பன எதிர்ப்பு அடிமட்டத் தொண்டர்களுக்கு மட்டும் தான் போலிருக்கிறது. தமிழ்நாட்டு திராவிட வீரர்களின் இந்தச் செயல் அமெரிக்காவின் கறுப்பர்களைப் போன்றது. அவ்ர்களும் வெள்ளையர்களை எப்போழுதும் குற்றம் கூறுவார்கள். வெள்ளையரகள் தமது முன்னோருக்குச் செய்த கொடுமைகளை அடிக்கடி பேசுவார்கள். ஆனால் படிப்பி‌ல், விளையாட்டில் அல்லது வேறு விதமாக முன்னுக்கு வந்து விட்டால், ஒரு வெள்ளைப் பேண்ணை மணந்து கொண்டு. வெள்ளையரக்ள் வாழும் பகுதிகளில் வீடு வாங்க்கிக் கொண்டு கூடி போய் விடுவார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் தாழ்வு மனப்பான்மை தான்.

    ReplyDelete
    Replies
    1. இதில் தவறு இருப்பதாக நான் அறியவில்லை. மணியம்மையரை பாலுறவுக்காக அவர் மணக்கவில்லை, தமது சொத்துக்களை நல்ல ஒருவரிடம் விட்டுச் செல்லவும், திராவிட இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவுமே அவர் அவ்வாறு செய்தார். அத்தோடு அக்காலக் கட்டத்தில் திராவிட கொள்கைகளில் முழு பங்காற்றியவரும் மணியம்மையார் ஆவார். இதில் தவறு என்ன இருக்கு என்பதை நான் அறியவில்லை... ! பார்ப்பனர்களை எதிர்ப்பது என்பது பார்ப்பனத்தை எதிர்ப்பது மட்டுமே, பார்ப்பனியத்தை துறந்த பார்ப்பனர்களை எதிர்ப்பதல்ல. ஆகையால் உங்களது கருத்தோடு நான் மறுத்தலிக்கின்றேன்.

      Delete
  3. //பார்ப்பனர்களை எதிர்ப்பது என்பது பார்ப்பனத்தை எதிர்ப்பது மட்டுமே//
    மன்னிக்கவும், இது வெறும் சப்பைக்கட்டு காட்டுவது போல் தான் தோன்றுகிறது. பார்ப்பானர்கள் இல்லாமல் பார்ப்பனீயமா? பார்ப்பனீயத்தைக் கட்டிக் காப்பவர்கள் யார் , பார்ப்பனர்கள தானே. திராவிடத் தலைவர்களே ஒவ்வொரு நாளும் பார்ப்பன மனைவியுடன் படுத்துறங்கி விட்டு, பார்ப்பன மருமகள்களை வாழ்த்தி விட்டு வெளியில் வந்து பார்ப்பனீயத்தை எதிர்போம், பார்ப்பனர்கள் தமிழர்களல்ல எனும் பம்மாத்து தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. அதனால் தான் என்னைப் போன்ற ஈழத் தமிழர்களுக்கு திராவிடத்தால் தமிழினம் இழந்தது தான் அதிகம் போல் தான் தெரிகிறது. அதனால் எங்களுக்கு திராவிடப் பம்மாத்தில் நம்பிக்கையில்லை, நாங்கள் பார்ப்பனர்களை தமிழர்களாகவும், முஸ்லீம்களை தமிழரல்லாதவர்களாக பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. சகோ வியாசன்
      பார்ப்பனீயம் என நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்.

      என் விள்ங்குதலின் படி பார்ப்பனீயம் என்பது பிராமணன்,சத்ரியன்,வைசியன்,சூதிரன் என்னும் படிப்படியான பிரமிட் கட்டமைப்பும் அத்னை போற்றும் வேதங்களும் ஆகும்.

      அதில் நம்பிக்கை இல்லாத பிராமணரை பார்ப்பனர் என் சொல்லக் கூடாது!!

      பிற்பட்ட/தலித் சாதி மக்களில் சிலர் சாதியைத்,சடங்கு சம்பிரதாயங்களைத் தாங்கி பிடித்தால் அவர்களும் பார்ப்பனரே!!

      பிராமணர்கள், முஸ்லிம்கள் தமிழர்கள்தான்,சகோதரர்கள்தான். ஆனால் அதை அவர்களும் உண்ர வேண்டும்!!.

      நன்றி!!!

      Delete
    2. பார்ப்பனியத்தை பார்ப்பனர் மட்டுமா வளர்க்கின்றார்கள், கனடாவில் பல ஈழத்தமிழர்கள் கூடத்தான் வளர்க்கின்றார்கள் .. அனைவரும் பார்ப்பனரே !

      Delete
  4. வணக்கம் சகோ,

    நல்ல பதிவு. பெரியாரின் செயல்களை வர்லாற்றுரீதியாக அலசியது அருமை. இபோதைய த்லைமுறைக்கு சென்ற தலைமுறையினரின் சாதிய ஒடுக்குமுறை மறந்து போனதில் வியப்பு இல்லை.இன்னும் சாதியை பிடித்து தொங்குபவனும் இருக்கிறான்.

    இன்னும் வேறு சாதிக்காரன் பூசாரி ஆகக்கூடாது என வழக்கும் நடக்கிறது

    திராவிட இயக்கத்தின் தாக்கத்தால்தான் தமிழகத்தில் மட்டும் சாதிப்பெயர் போட்டுக் கொள்ளும் வழக்கம் ஒழிந்தது, அப்படிப் போடும் மனைதர்களை நாம் வினோதமாக் பார்த்து விமர்சிக்கிறோம்.

    பெரியார் ஒருஇறைமறுப்பாளர்,சாதி மறுப்பாளர், பெண்ணிய போராளி ,எதார்த்தவாதி என் பல்முகம் கொண்டவர்.அவர் பேரை சொல்லி பின்வந்த்வர்கள் பணம்,பதவி ருசி கண்டு மாறியது வேறு கதை.

    பெரியார் மட்டும் இஸ்லாம்,கிறித்த்வம் மதம் மாறி இருந்தால் அவருக்கு பெரும் பலன் கிடைத்து இருக்கும்!!

    எப்படி மதம் சார் பிடிப்பு இல்லா ,மேலைக் கலாச்சாரத்தில் ஊறிய முகமது அலி ஜின்னா , பாகிஸ்தானின் தேசத் தந்தை ஆக மதவாதி ஆனவுடன் முடிந்தது?

    ஆனால் பெரியார் அப்படி செய்யவில்லை!!

    மதமாற்றம் பரிந்துரை தவிர்த்து பெரியார் மீது நமக்கு கருத்து மாறுபாடு இல்லை.

    பல பிற்பட்ட,தலித் சாதியினர் படித்து முன்னேறியதற்கு திராவிட இயக்கமும் காரணமே!!
    **
    வஹாபிகளுக்கு சும்மா இருக்கவே முடியாது. எதையாவது உளரிக் கொண்டே இருக்க வேண்டும்!!

    பெரியார் பார்ப்பனர்களை திட்டினார் அவ்வளவுதான்,ஆனால் முகம‌து (சல்) போல் கொள்ளை அடித்து 20% கமிஷன் அடித்தாரா!!

    தன்னை ஏற்காத யூத கிறித்தவர்களை கொன்று குவித்து நாட்டை விட்டு விரட்டினாரா?

    இன்னும் முகமதுவை விமர்சித்தால் உண்மை தெரிந்து விடும் என்பதால் பல் இஸ்லாமிய நாடுகளில் மரண தண்டனை கொடுக்கிறார்.

    பெரியார் பாம்பை விட பார்ப்பானை அடி என்பது தீவிரவாதம் என்றால் ஹி ஹி குரான்,ஹதித் சொல்வதும் அதன் மீதான ஷரியா சட்டமும்
    என்ன சொல்வது?

    தமிழ் பதிவுலகத்தில் சில ஆண்டுகளாக யூதர்களின் மேல் வெறுப்பு சார் கருத்திடுவது யார் என தெரியாதா?

    முகம‌து யூதரை வெறுத்தால், அல்லாஹ்வும் வெறுப்பார்,150 கோடி மூமினும் வெறுப்பார்கள்!!

    வஹாபிகள் சவுதி அரசனுக்கு வால் பிடிப்பார்கள்!!

    இவர்களிடம் இனியாவது திராவிட சகோக்கள் எச்சரிகையாக இருந்து ஆதரிக்க வேண்டாம் .

    டிஸ்கி: இலங்கையில் சிங்களர் பொதுபலசேனா மட்டும் என்ன செய்தாலும், விமர்சிக்க மாட்ட்டோம் என பல்லைக் கடித்து பொறுத்து போகும் வஹாபிகளின் திறமையே திற்மை!!. ஏன் தமிழ்நாட்டில் மட்டும் சத்தம?


    நன்றி!!

    ReplyDelete
  5. என்ன இக்பால் செல்வன், இது மாதிரி, விவாதம்? மணியம்மையை பாலுறவுக்காக மணந்தால் என்ன தப்பு??? பெரியாருக்கு ஆண்மீகவியாதிகள் மாதிரி பெண்களை "வெச்சுக்கத்" தெரியாது..

    எல்லா இரண்டு கால் நாய்ககளும், என்னையும் சேர்த்து, திருமணம் செய்வது ஜல்சா பண்ணத்தான்...அப்புறம் பெரியார் திருமணம் செஞ்சா என்ன புடலங்கா? ஜல்சா செய்ய வயது முக்கியமில்லை?

    எல்லா ஆன்மீக வியாதிங்க என்ன சாமி கும்பிடவா கல்யாணம் செய்கிறார்கள்? எல்லா நாய்களும் ஜல்சா செய்யத்தான்...அப்புறம் என்ன? நிற்க.

    உண்மையா திருமணம் செய்த பெரியாரைப் பற்றி பேச பிராடு பொறம்போக்கு ஆண்மீக வியாதிகளுக்கு ஒரு மசுரு தகுதியும் இல்லை.

    திருமணம் செய்யமால் பக்தைகளுடன் சந்துல பேந்தாவுடற நாதாரிங்க இதை பேச அருகதை இல்லை...!
    _____________________

    [[மணியம்மையரை பாலுறவுக்காக அவர் மணக்கவில்லை]]

    ReplyDelete
    Replies
    1. மணியம்மையாரை பெரியார் பாலுறவுக்காக மணக்கவில்லை, அப்படி மணந்தாலும் அதில் தவறில்லை ! 55 வயதில் 9 வயது சிறுமியை மணந்ததை விட, மணக்காமல் பக்தைகளோடு ஜல்சா பண்ணுவதை விட பெரியார் செய்தமை கண்ணியமான ஒன்றாகும்,!

      Delete
  6. வஹாபிகள் சந்தர்ப்பவாதிகள். தங்கள் சுயநலனுக்காக யார் முதுகிலும் குத்துவார்கள். உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யக்கூடியவர்கள்.

    ReplyDelete

  7. //பார்ப்பனீயம் என நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்//
    மனுதர்மம் தான் பார்ப்பனீயத்தின் அடிப்படை, அதை நியாயப்படுத்துவதும், அதன் வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதும் பார்ப்பனீயம்.

    //அதில் நம்பிக்கை இல்லாத பிராமணரை பார்ப்பனர் என் சொல்லக் கூடாது!//
    அப்படியானால் அவர் தன்னைப் பிராமணர் என்று அடையாளப்படுத்தவும் முடியாது. வர்ணாசிரமத்தில் நம்பிக்கையில்லாத ஒருவர் பிராமணர் அல்ல, அவர் பூணூலும் அணியக் கூடாதல்லவா? அதனால் தான் வர்ணாசிரமத்தை வெறுத்த பாரதியார் தனது பூணூலை அறுத்துப் போட்டார்.

    //பிராமணர்கள், முஸ்லிம்கள் தமிழர்கள்தான்,சகோதரர்கள்தான். ஆனால் அதை அவர்களும் உண்ர வேண்டும்!!.//
    எனக்கும் தமிழ்நாட்டில் நிறைய முஸ்லீம் நண்பர்கள் உண்டு. இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. அதனால் தான், ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் தமிழர்களல்ல என்றேன்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. //முஸ்லிம்களும் தமிழர்களே !!//
    OK, ஆனால் இதை இலங்கை முஸ்லீம்களிடம் சொன்னால் அடிக்க வருவார்கள். :))

    ReplyDelete
  10. // வெளியில் பார்ப்பன எதிர்ப்பு பேசுவார்கள் ஆனால் அவர்களின் மனைவி, மருமக்கள், ஏன் பேரப்பிள்ளை, பூட்டப்பிள்ளைகளின் மனைவிமார் கூடப் பார்ப்பனப் பெண்கள் தான். அபப்டியானால் திராவிட தலைவர்களின் பார்ப்பன எதிர்ப்பு அடிமட்டத் தொண்டர்களுக்கு மட்டும் தான் போலிருக்கிறது.//

    வியாசன், உங்கள் கூற்றுக்கும் சு.சாமியின் "பிரபாகரன் தீவிரவாதி என்றால் அவன் மகன் பாலச்சந்திரன் என்கிற சிறுவனும் தீவிரவாதிதான், எனவே பாலச்சந்திரனின் படுகொலைக்கு வருந்தத் தேவை இல்லை" கூற்றுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.

    கொள்கை அளவு எதிர்ப்புகளுடன் அந்த கொள்கை சார்ந்தவர்களின் வாரிசுகள் என்பற்காக அவர்களும் எதிர்க்க்கப்பட வேண்டும் என்பது முட்டாள் தனமான கூற்று. மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. ///வியாசன், உங்கள் கூற்றுக்கும் சு.சாமியின் "பிரபாகரன் தீவிரவாதி என்றால் அவன் மகன் பாலச்சந்திரன் என்கிற சிறுவனும் தீவிரவாதிதான், எனவே பாலச்சந்திரனின் படுகொலைக்கு வருந்தத் தேவை இல்லை" கூற்றுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.///

      திரு.கோவி கண்ணன்,
      ம‌ன்னிக்க‌வும். பால‌ச்ச‌ந்திர‌னும் ஆயுத‌மேந்திப் போராடியிருந்தால் சு.சுவாமியின் வாத‌ம் ச‌ரியான‌தே. திராவிட‌த் த‌லைவ‌ர்களின் வாரிசுக‌ள் திராவிட‌த்தையும், பார்ப்பன‌ எதிர்ப்பு அர‌சிய‌லில் ஈடுப‌டாத‌ த‌னிப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளாக‌ இருந்தால், உங்களின் பாலச்ச‌ந்திர‌ன் உதார‌ண‌ம் ச‌ரியாக‌ இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து. ஆனால் திராவிட‌த் த‌லைவ‌ரின் பார்ப்பன‌ர்க‌ளை ம‌ணந்த மட்டும‌ல்ல‌, பார்ப்ப‌ன‌ர்க‌ளுக்குப் பிற‌ந்த‌வ‌ர்க‌ள் கூட‌ பார்ப்ப‌ன‌ எதிர்ப்புத் திராவிட‌ அர‌சிய‌லின் துணையுட‌ன் அர‌சிய‌லுக்கும், திரையுல‌குக்கும் வ‌ருகிறார்க‌ள், எதிர்கால‌த்தில் திராவிட‌த்த‌லைவ‌ர்களாக‌ வ‌ருவத‌ற்கும் வாய்ப்புண்டு. அதிலுள்ள‌ முர‌ண்பாட்டைத் தான் நான் குறிப்பிட்டே

      Delete
  11. இக்பால்செல்வன்:

    நீங்கள் எழுதிய சில பத்திகளை பார்த்து வியந்தேன். உங்கள் எழுத்துக்கள் ஒரு பொதுநலத்தில் ஆர்வமுள்ள ஒருவராக அடையாளப்படுத்துகிறது. அதே சமயம் சமய நல்லிணக்கமுள்ள ஒரு மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு அடிப்படையான திராவிட இயக்க வரலாறு பற்றி எழுதும்போது சரியான செய்திதானா என உறுதிப்படுத்திக்கொண்டு எழுதுங்கள். மணியம்மையார் தந்தையார் திராவிடர் கழக உறுப்பினர். வேலூரைச் சேர்ந்தவர். அவரது பெயர் கனகசபை முதலியார். அதுவே போன்று தந்தை பெரியார் தம் நண்பர் ராஜாஜியை சந்தித்தபோது, ராஜாஜி சொல்லிய யோசனை “மணியம்மையை திருமணம் செய்வது நல்லதல்ல” என்பதே. இதுபற்றிய ஆதாரம் பல உள்ளன. ஒரு ஆதாரத்தினை இணையதள முகவரியுடன் கீழே கொடுத்துள்ளேன். வீரமணி என்ற நச்சுப்பாம்பு இன்றுவரை திராவிடக்கொள்கைகளை வளரவிடவே இல்லை என எழுதியிருக்கிறீர்கள். மிகவும் இந்து சமயநம்பிக்கையுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த என்னையும் என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கானோரும் திராவிடக்கொள்கைகளை அறியச்செய்தவர் வீரமணி. திராவிடக்கொள்கையின் அடிஆதாரமான, தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறக்காரணமானது சமூக நீதி. அச்சமூகநீதியின் உயிராய் இருக்கும் இடஒதுக்கீடு தந்தை பெரியார் மறைவுக்குபிறகு, அகில இந்தியாவுக்கும் எடுத்துச்செல்ல காரணகர்த்தா வீரமணி. 1980 களில் துவங்கி பலப்பல ஆண்டுகள் அவர் முன்னின்று் உழைத்து ஒருங்கிணைத்து இந்திய பிரதமர் விபி சிங் மூலம் மண்டல் பரிந்துரைகள் அமுலாகக்காரணமாக இருந்தவர் வீரமணி. கருத்துமாறுபாடு கொண்டவர்களாக இருப்பினும் சமய நல்லிணக்கம், சாதி ஒழிப்பு, பகுத்தறிவு இவை இந்தியாவில் பரவ வெல்ல உங்களைப்போன்ற நல்லுள்ளங்கள் ஆதாரத்தை உறுதி செய்து எழுதுவது நல்லது. இதுபற்றி உங்கள் வலைப்பூவில் ஒரு திருத்தம் எதிர்பார்க்கிறேன். திருத்தத்தை பதிவு செய்வீர்கள் என நம்புகிறேன். இனி, சரியான தகவல் அடிப்படையிலில்லாத உங்கள் எழுத்துக்களையும், நான் குறிப்பிட்ட ஆதாரத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.

    - அரசு

    தமது 70-ஆவது வயதில் திராவிடப் போராடத்தை வழிநடத்தி செல்லவும், திராவிடப் போராடத்துக்காக வைத்திருந்த தமது சொத்துக்களையும் பாதுக்காக்க ராஜாஜியின் ஆலோசணையிலேயே மணியம்மையாரை மணந்தார் பெரியார் என்பது எத்தனை பார்ப்பனர்களுக்குத் தெரியும். விதவையாக இருந்த மணியம்மையார் பெரியாரின் உதவியாளராக நீண்ட காலம் இருந்தும் வந்தவர். மணியம்மையாரை பெரியார் நம்பினார். மணியம்மையாரும் ஒரு பார்ப்பன பெண் என்பதாவது இன்றுள்ள அறிவுக் வீரமணி என்ற நச்சுப் பாம்பு இன்று வரை திராவிடக் கொள்கைகளை வளரவே விடவில்லை என்பது தனிக் கதை.

    குஞ்சுகளுக்குத் தெரியுமா என்பது தான் வியப்பே. ஆனால் மணியம்மையாருக்குப் பின் திராவிடக் கழகத்தைப் பிடித்துக் கொண்ட
    http://www.tamiltribune.com/05/1201.html



    Periyar met the then Indian Governor-General Rajaji on May 14, 1949. When DK leaders asked him about the meeting Periyar replied that they discussed personal matters. Upon further pressure from party leaders, including C. N. Annadurai, Periyar published a statement in his newspaper Viduthalai on June 19, 1949. (Viduthalai means "freedom"). The statement said that he no longer was able to travel around and carry on with his work as before because of health. He added that he did not see anyone who would be able to take responsibility of his work. So he was to appoint a heir, and he discussed that matter with Rajaji. (Periyar was 72 at that time.)

    Then Periyar dropped a bombshell just nine days later. He published a statement in Viduthalai on June 28, 1949 that he was planning to make Miss K. A. Maniammai his heir. He said that he also intended to make Maniammai a trustee of party funds, along with unnamed four or five others. Miss Maniammai was in her mid-twenties and was a relatively new party activist. Her late father Kanakasabai Mudhaliar of Vellore was a party member. Upon his death a few years before, Maniammai came to work for Dravidar Kazhagam. She became Periyar's personal assistant taking care of him. Periyar, a long-time widower with no children, was in his late sixties when Maniammai became his personal assistant. As of 1949, she was taking care of Periyar for about five years. Periyar's decision to name a relatively new party activist as his heir shocked many party leaders and cadres. Most party leaders had been with him for many years and had participated in various agitations and gone to jail.

    ReplyDelete
    Replies
    1. சுட்டிக்காட்டலுக்கு நன்றிகள் ! நிச்சயம் இது தவறான ஒன்று தான். மணியம்மையார் ஒரு பார்ப்பன பெண் என்று தான் நான் கருதி வந்தேன். அதை எங்கோ வாசித்த ஞாபகம் மட்டுமே. தவறுக்கு வருந்துகின்றேன். அதனைச் சரி செய்ய முயல்கின்றேன். நன்றிகள் !

      Delete
  12. //பார்ப்பனியத்தை பார்ப்பனர் மட்டுமா வளர்க்கின்றார்கள், கனடாவில் பல ஈழத்தமிழர்கள் கூடத்தான் வளர்க்கின்றார்கள் .. அனைவரும் பார்ப்பனரே !//

    ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போல் பார்ப்பனீயத்துடன் ஒருபோதும் மல்லுக்கட்டியது கிடையாது. அதனால் கனடாவிலுள்ள ஈழத்தமிழர்களுக்குப் பார்ப்பனீயத்தின் கொடிய முகம் அவ்வளவு அறிமுகமில்லை. ஆனால் ஈழத்தில் பார்ப்பனீயத்தை வளர விடாமல் தடுத்த யாழ்ப்பாணத்தமிழர்கள், கனடாவில் அதை தம்மை அறியாமலே வளர்த்து விடுகிறார்கள் என்பதை நானும் அவதானித்துள்ளேன். அதனால் தான் புலம்பெயர் தமிழர்களின் கோயில்களில் அனைத்துசாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களையும் நியமிக்க வேண்டுமென்பது என்னுடைய கருத்தாகும்.

    ReplyDelete
    Replies
    1. //ஈழத்தில் பார்ப்பனீயத்தை வளர விடாமல் தடுத்த யாழ்ப்பாணத்தமிழர்கள்// பார்ப்பனியத்தை தடுத்த யாழ்ப்பாணத் தமிழர்கள் குறித்து அறிய ஆவலாக உள்ளேன், பகிர்ந்தால் நன்று .. ஆறுமுக நாவலர் எனக் காமெடி செய்துவிட வேண்டாம் எனவும் வேண்டிக் கொள்கின்றேன் .. !

      Delete
  13. வியாசன் சொல்வதில் உண்மை இருக்கிறது: பாலச்சந்திரன் (இந்துஸ்டான் டைம்ஸின் இலங்கை நிருபர். இப்போதில்லை) ஒரு கட்டுரை போட்டு இதை விவரித்திருந்தார். இலங்கை திரிகோண மலைப்பகுதியில் உள்ள முசுலீகள் தமிழ்ப்படப்பாடல்கள், தமிழ் நூல்கள், தமிழ்ப்பத்திரிக்கைகள், தமிழ்த்திரைப்பட விசிடிக்கள் அனைத்தையும் தடை செய்துவிட்டனர். தமிழ் மொழி மட்டும் இன்னும் பேசப்படுகிறது. அவர்கள் செய்யக்காரணம் தமிழ்க்கலாச்சாரத்தை தடை செய்யாவிட்டால் வஹாபி டைப் இசுலாம் வள்ராது.. இன்னும் பலபல எழுதியிருந்தார். எனவே இலங்கை முசுலீம்கள் த்ங்களைத்தமிழரக்ளாக நினைத்து வாழ விரும்பினாலும் முடியாது.

    தமிழகத்தில் நிலையும் அப்படி மெல்ல மெல்ல உருவாகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் மதுரையிலோ, ராமநாதபுரத்திலோ அல்லது சென்னையிலோ, பர்தா போட்ட பெண்களைக் காணபது அரிது. இன்றும் சரவ சாதாரணம். வஹாபி டைப் இசுலாமே திணிக்கப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தைத் தமிழ்நாட்டில் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அவர்களுக்குள் இருபிரிவுகள் உருவாகலாம். இன்று கூட விசுவரூபம் படத்துக்கு எதிர்ப்பவர்; மாற்றானவர் என்ற பிரிவை தமிழ்முசுலீம்களிடம் பார்க்கலாம்.

    தமிழ்ப்பார்ப்ப்னரைப் பொறுத்தவரை இந்தப் பேச்சுக்கே இடமில்லை. அடித்தாலும் உதைத்தாலும் அவர்கள் இங்குதான் சாவார்கள். எவ்வளவுதான் அடித்தாலும் தாயைக் கட்டியணைக்கும் குழந்தை போல. புலம் பெயர்ந்தாலும் அவர்கள் தங்களைத்தமிழர்கள் என்றுதான் அடையாளம் காட்டுவார்கள். அவர்களுக்கு தாங்கள்தான் தமிழையே படைத்தோம் என்பதால், அந்நிய உணர்வில்லை. அவர்கள் வந்தேறிகள் என்ற பிரச்சாரம் ஒரு அரசியல் பிரச்சாரம் என்பது தெரிவதால் எவருமே கண்டு கொள்வதில்லை. அவர்கள் எங்கு சென்றாலும் 'நம்மூர் போல வருமா?' என்றுதான் பேசிக் கொள்வார்கள். உருது பேசும் முசுலீம்கள், தமிழ் பேசும் முசுலீம்கள் என இருவர் இப்போதும் உண்டல்லவா? ஆனால் சமசுகிருதம் பேசும் பார்ப்பனர், தமிழ் பேசும் பார்ப்ப்னர் என்று உண்டா? சவுதி அரேபியர்களுக்காக வரிந்து கட்டும் முசுலீம்களையும், நம்மூர் போல ஆகுமா எனப்பேசும் தமிழ்ப் பார்ப்ப்னர்களையும் ஒப்பிடுவது முழுக்கமுழுக்க பொருந்தாது.

    ReplyDelete
    Replies
    1. இலங்கை முஸ்லிம்கள் தம்மை தமிழராக அடையாளப்படுத்திக் கொள்ளாமல் வெறும் பேச்சு மொழியாக மட்டும் தமிழை வைத்திருப்பது நிச்சயம் மோசமானதொரு முறையே என்பதில் ஐயமில்லை. அவர்கள் தமிழர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விருப்பம் இல்லை எனில் தமிழை துறந்து சிங்களமோ, அரபியோ பேச வேண்டும் அதை விட்டு இனத்தால், மொழியால் தமிழர்களாக இருந்து அரசியல் எலும்புத் துண்டுகளுக்காக தமிழர் இல்லை என்ற வாதத்தை கண்டிக்கவே வேண்டுகின்றேன். இதே நிலையை தமிழகத்தில் உருவாக்கவே பி.ஜே போன்றோர் விரும்புகின்றனர்... என்று தோன்றச் செய்கின்றது..

      Delete
    2. குலசேகரன்,
      நீங்க சொன்ன கருத்து முழுவதும் முழுக்க சரியானது.
      தமிழகத்தில் இஸ்லாமியர் தங்களை தமிழர்கள் என்று அழைக்க இது வரை அனுமதிப்பதும் மத பிரசார நோக்கமே.

      Delete
  14. //பார்ப்பனியத்தை தடுத்த யாழ்ப்பாணத் தமிழர்கள் குறித்து அறிய ஆவலாக உள்ளேன், பகிர்ந்தால் நன்று .. ஆறுமுக நாவலர் எனக் காமெடி செய்துவிட வேண்டாம் எனவும் வேண்டிக் கொள்கின்றேன் .. !///

    பார்ப்ப‌னீய‌த்தை த‌டுத்த‌ என, வ‌ருணாசிர‌மத்தில் உய‌ந்த‌ குழுவின‌ராகிய‌ பார்ப்ப‌ன‌ர்க‌ளின் ஆதிக்க‌த்தை யாழ்ப்பாண‌த்த‌மிழ‌ர்க‌ள் வ‌ள‌ர‌விட‌வில்லை என்ற‌ க‌ருத்தில் நான் குறிப்பிட்டதை, யாழ்ப்பாண‌த்த‌மிழ‌ர்க‌ள் பார்ப்ப‌னீய‌த்தையும் அதாவ‌து அத‌ன் அடிப்ப‌டையாகிய‌ சாதிமுறையையும் எதிர்த்தார்க‌ள் என்று நீங்க‌ள் க‌ருத்தில் கொண்டால் அதற்கு நான் பொறுப்ப‌ல்ல‌. ஈழ‌த்தில் ம‌னுத‌ர்ம‌த்தின் கீழ் சூத்திர‌ர்க‌ளாககிய‌ வெள்ளாள‌ர்க‌ள் த‌ம்மை ச‌ற்சூத்திர‌ர்களாக்கி, பார்ப்ப‌ன‌ர்க‌ளுக்கு த‌ம்முட‌ன் இணையாக்கிக் கொண்டார்க‌ளே தவிர‌ பார்ப்பன‌ ஆதிக்க‌தையும், ம‌னுத‌ர்ம‌ அடிப்ப‌டையிலான‌ பார்ப்ப‌னீய‌த்தையும் வ‌ள‌ர‌ விட‌வில்லை. யாழ்ப்ப்பாண‌த்த‌மிழ‌ர்க‌ள் கோயில் சாவியைத் தாங்க‌ளே வைத்துக் கொண்டு, பார்ப்ப‌ன‌ர்க‌ளைக் கோயிலில் வேலைக்கு ம‌ட்டும் தான் வைத்துக் கொண்டார‌கள். த‌மிழ்நாட்டில் போல் கோயிலுக்குள் தாங்க‌ள் வெளியில் நின்று கொண்டு, பார்ப்ப‌ன ஆதிக்க‌த்தை வ‌ள‌ர‌ விட‌வில்லை. அத‌னால் தான் த‌மிழ்நாட்டுக் கோயில்களில் பார்ப்ப‌ன‌ர்க‌ள் செய்யும் அட்ட‌காச‌ங்க‌ளையும்,அவ‌ர‌க்ள் செலுத்தும் ஆதிக்க‌த்தையும், த‌மிழ‌ர்க‌ளைப் பார்த்து நீ, த‌ள்ளு, போ, போ எனும் போதெல்லாம் எங்க‌ளுக்கு ஆத்திர‌ம் வ‌ருகிற‌தென‌ நினைக்கிறேன். :))

    ReplyDelete
    Replies
    1. யாழ்ப்பாணத் தமிழர்கள் எனப்பட்டவர்கள் தான் ஈழத்தமிழர்கள் மத்தியில் பார்ப்பனியத்தை விதைத்தவர்கள். அதற்கு வரலாற்றுக் காரணங்களும் உண்டு, ஆரியச் சக்கரவர்த்திக்கள் எனப்படும் பார்ப்பன தமிழ் மன்னர்களின் ஆட்சியில் தான் கேரளம், தமிழகத்தில் இருந்து குடியேறிய வேளாளர்கள் ஆதிக்கம் பெறத் தொடங்கினார்கள். அவர்கள் பார்ப்பனர்களோடு தம்மை சமமாக பாவிக்கத் தொடங்கியது யாழ்ப்பாணத்தில் தோன்றியதல்ல, மாறாக இந்தியாவிலேயே தோன்றியது. சோழர்கள் காலத்திலேயே வேளாளர்கள் உட்பட பல வேளாண் சமூகங்களும், கேரளத்தின் நாயர்கள் போன்ற சத்திரிய சமூகங்களும் தம்மை பார்ப்பனருக்கு ஒப்பாக கருதினார்கள், அதிகாரத்தை கையில் கொண்டு பார்ப்பனர் செய்ய நினைத்ததை தாமே செய்தார்கள். மண்ணின் மைந்தர்களான தலித்கள், ஈழ்வர்கள் உட்பட பலரையும் அடிமையாக பாவித்தார்கள் இதனையே ஈழத்திலும் தொடர்ந்தார்கள். வேதங்களை, வேதக் கடவுளை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்பவர் அனைவரும் பார்ப்பனியத்தை பரப்புவோர்களே. இதில் சாதி வெறி ஓரங்கமே.. இது இன்றளவும் கூட தொடர்கின்றதே.. !

      Delete
  15. //திராவிட‌த் த‌லைவ‌ர்களின் வாரிசுக‌ள் திராவிட‌த்தையும், பார்ப்பன‌ எதிர்ப்பு அர‌சிய‌லில் ஈடுப‌டாத‌ த‌னிப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளாக‌ இருந்தால், உங்களின் பாலச்ச‌ந்திர‌ன் உதார‌ண‌ம் ச‌ரியாக‌ இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து. ஆனால் திராவிட‌த் த‌லைவ‌ரின் பார்ப்பன‌ர்க‌ளை ம‌ணந்த மட்டும‌ல்ல‌, பார்ப்ப‌ன‌ர்க‌ளுக்குப் பிற‌ந்த‌வ‌ர்க‌ள் கூட‌ பார்ப்ப‌ன‌ எதிர்ப்புத் திராவிட‌ அர‌சிய‌லின் துணையுட‌ன் அர‌சிய‌லுக்கும், திரையுல‌குக்கும் வ‌ருகிறார்க‌ள், எதிர்கால‌த்தில் திராவிட‌த்த‌லைவ‌ர்களாக‌ வ‌ருவத‌ற்கும் வாய்ப்புண்டு. அதிலுள்ள‌ முர‌ண்பாட்டைத் தான் நான் குறிப்பிட்டே
    //

    அடிமட்டத்தொண்டர்கள் எல்லாரும் அவர்கள் ஜாதிப்பெண்களைத்தான் மணந்தார்கள்; அல்லது பார்ப்ப்னப்பெண்களை மணக்கவில்லையென்று எப்படிச்சொல்கிறீர்கள்?

    ஒருவன் ஒருத்தியை பெரியோர்களால் பார்த்துச்செய்யும் மணத்தில் மட்டுமே அவள் என்ன ஜாதி எனத் தெரிகிறான். காதல் மணத்தில் அப்படித் தெரிந்து செய்தால், அது காதல் மணமன்று. மேலும், ஒரு பார்ப்பனீய எதிர்ப்பாளன், காதலிக்கிறான். சில காலம் கழித்தே அப்பெண் ஒரு பார்ப்பனப்பெண் எனத் தெரியவ்ருகிறது. உடனே அதற்காக அவளை விரட்ட முடியுமா? அவளும்தான் விடுவாளா?

    பெண் எனப்படுபவன் ஆண்கள் வகுத்த சமூக நியதிகளை நடாத்திச்செல்பவளே தவிர (அதுவும் கூட நிர்ப்பந்தத்தால்), அச்சமூக நியதிகளை அவள் உருவாக்கவில்லை. நம் சமூகத்தில் ஆதிகாலம் தொட்டு இன்றுவரை பெண், ஒரு செயப்படுபொருள்.; தானே எதையும் செய்யாது.

    எனவே, பெண்ணுக்கென்று சாதியில்லை. அதன்படி பார்த்தால், திராவிட தலைவர்களோ, அவர்கள் பிள்ளைகளோ, அல்லது பார்ப்பனீய எதிர்ப்பாளர்களோ, ஒரு பார்ப்பனப்பெண்ணை மணக்கும்போது, ஒரு பெண்ணை மணக்கிறார்கள் என்றுதான் வருமே தவிர, ஒரு பார்ப்ப்னப்பெண்ணை மணக்கிறார்கள் என்று வரவே வராது. மணந்த பின், அவள் முழுக்க முழுக்க பார்ப்ப்னருக்கு அந்நியப்பெண்ணாகிவிட்டு, தான் மணந்த உறவையையே தன்னுறவாக் கொள்கிறாள். இது இயற்கை.

    அம்பேத்கரின் மனைவியும் ஒரு பார்ப்பனப்பெண். அவர் தன் கணவன் இறந்த பின்னும் தன் மகனோடு சேர்ந்து தலித் இயக்கத்தை நடாத்திச்சென்று அண்மையில்தான் மறைந்தார் என நினைவு கூர்க.

    அதே சமயம், அப்பெண் பார்ப்பனீய குட்டையில் ஊறியவளாகி அதை தன் கணவனை நம்பச்செய்து விட்டு அடிமையாக்கிவிட்டால் நீங்கள் சொன்ன அனைத்தையும் ஏற்கிறேன். அப்படி ஒருவேளை சினிமாக்கதையில் நிகழலாம்.

    ReplyDelete
    Replies
    1. //அதே சமயம், அப்பெண் பார்ப்பனீய குட்டையில் ஊறியவளாகி அதை தன் கணவனை நம்பச்செய்து விட்டு அடிமையாக்கிவிட்டால் நீங்கள் சொன்ன அனைத்தையும் ஏற்கிறேன். அப்படி ஒருவேளை சினிமாக்கதையில் நிகழலாம்.//
      உதாரணமாக கலைஞர் க‌ருணாநிதியின் ம‌க‌னும் திராவிட‌ இய‌க்க‌த்தின் எதிர்கால‌த் த‌லைவ‌ருமாகிய‌ ஸ்ராலினின் மன‌வி ஒரு பார்ப்ப‌ன‌ப் பெண். அவ‌ர் க‌ண‌வ‌னுக்காக‌ கோயிலுக்குப் போகிறார், யாக‌ங்க‌ள் செய்கிறார், அவ‌ர‌து க‌ண‌வ‌ன் வீட்டில் ம‌னைவியின் வேண்டுகோளின் ப‌டி எத்த‌னை பூசை புன‌ஸ்கார‌ங்க‌ளைச் செய்கிறாரோ என்ப‌து யாருக்கும் தெரியாது. ஆனால் வெளியில் வ‌ந்தால் அவ‌ர் ஒரு பெரியாரின் ப‌குத்த‌றிவுப்பாச‌றையில் உருவான‌, அந்த‌ப் பார‌ம்ப‌ரிய‌த்தில் வ‌ந்த‌ க‌ழ‌க‌த்தின் வ‌ருங்கால‌த் த‌லைவ‌ர். ஒரு திராவிட‌ அடிம‌ட்ட‌த் தொண்ட‌னுக்கு என்ன‌ போதிக்க‌ப்ப‌டுகிற‌து, ப‌குத்த‌றிவு, த‌ந்தை பெரியாரின் பேச்சுக்க‌ள், பெரியாரிச‌ம் என்ப‌ன‌. இதிலுள்ள‌ அடிப்ப‌டை முர‌ண்பாடு உங்க‌ளுக்குத் தெரிய‌வில்லையா?

      Delete
  16. இன்றைய காலகட்டத்தில் தங்கள் கலாச்சாரத்தை தக்கவைத்துக் கொள்கிறோம் என மேற்கத்திய நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களே பார்பனிய சடங்குகளை அதி தீவிரமாக உயிர்ப்பித்து வருகிறார்கள்.

    உலகம் பரந்து கிடக்கிறது.எதையும் உள் வாங்கிக்கொள்ள வேண்டுமென்ற அறிவு தாகம் இல்லாத ஹதீஸ் ராமர்களை புறக்கணிப்போம்.எவன் நண்பன் ,பகையாளன் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத மூளை குழம்பிகள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னது சரி. மேலை நாடுகளில் வசிக்கும் தமிழர்களே குப்பை தொட்டிக்குள் போக வேண்டிய (ஷரியா மாதிரி) சடங்குகளை எல்லாம் பெரும் பண செலவு செய்து பாதுகாக்கின்றனர். கலாச்சாரத்தை தக்கவைத்துக் கொள்கிறோம் என்பது முமீன்கள் தக்கியா செய்வது மாதிரி பொய் சொல்லி கொள்வது. உண்மை என்னன்னா போலி கவுரவ பிச்சனை.நீங்க பெரும் பண செலவு பண்ணி ஒரு சடங்கு வைத்தா அதே சிற்றியுள்ள நான் மற்றவர்கள் தமிழர் வாயை பிளந்து பார்ப்பதற்காக உங்களை விட அதிக பணம் செலவு செய்து சடங்கு நடத்தி காட்டுவேன்.
      அது என்ன பார்பனிய சடங்கு. மத சடங்கு என்பதே சரியானது.

      Delete
  17. //viyasanFebruary 24, 2013 10:11 AM
    //முஸ்லிம்களும் தமிழர்களே !!//
    OK, ஆனால் இதை இலங்கை முஸ்லீம்களிடம் சொன்னால் அடிக்க வருவார்கள். :))//
    சிறிது காலம் பொறுங்கள் தமிழகத்திலும் இஸ்லாமியர்களை தமிழர்கள் என்று சொன்னா இஸ்லாமியர்கள் அடிக்க வருவார்கள். இலங்கையில் தமிழர்கள் என்று சொன்னாலே இஸ்லாமியர்கள் அடிக்க வரும் நிலமை உள்ள போது இந்திய அரசு யுத்தத்தால் பாதிக்கபட்ட தமிழருக்கு கொடுத்த வீடுகளை இஸ்லாமிய அமைச்சர் பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கும் போது இலங்கை தமிழ் தலைவர்கள் மட்டும் இஸ்லாமியர்களுக்காக வழிந்து கொண்டு திரிகிறார்களே!!! ஹலால் அவசியம் தேவை என்று அறிக்கை விட்டாங்களே இலங்கை தமிழ் தலைவங்க ஹலால் சாப்பாடு தான் சாப்பிடுவாங்களோ.
    எனக்கு தெரிந்து தமிழகத்தில் திராவிடம் ஏற்படுத்திய பார்ப்ப ஜாதி பார்த்து துவே ஷம் செய்வது போல் இலங்கை தமிழர்கள் செய்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. தமிழகத்தில் இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை என்ற எண்ணம் கொண்டதே இல்லை, அவர்கள் தாம் தமிழர்களாக, இந்துக்களாக, சமணர்களாக இருந்து மதம் மாறியதை ஒப்புக் கொண்டுள்ளார்கள் . வகாபிய வளர்ச்சி அதனை மாற்ற எத்தனிக்கின்றது. ஆனால் இலங்கை போல முஸ்லிம்களுக்கு இங்கு தனித்த அரசியல் பாதை தேவையற்றது, அது வெற்றியும் காணாது .. நானறிந்து எனது வயதை ஒத்த பல இளைய இஸ்லாமிய தமிழர்கள் ... இஸ்லாமிய வகாபிய அரசியலைப் பற்றியோ, தாம் தமிழர் இல்லை என்ற எண்ணமோ கொண்டிருக்கவில்லை. அவர்கள் சராசரியான இதர மக்களைப் போல கல்வி, வேலை வாய்ப்பு, மேற்கத்திய சாயல் கொண்ட வாழ்க்கை முறை என்பதையே பெரிதும் விரும்புகின்றார்கள். மதம் என்பதை தனிப்பட்ட ஒரு சிறு காரியமாக சுருக்கி கொண்டுள்ளார்கள். ஒரு கணிசமான வகாபிகளை விரட்டவே இஸ்லாம் குறித்து யாம் எழுதுகின்றோம் ஒழிய, ஒட்டு மொத்த இஸ்லாமியர்களையும் குற்றப்பரம்பரையாக்கி விட அல்ல. இதே நிலையைத் தான் பார்ப்பனர்களிலும் இதர சாதி பிரிவில் கூட உள்ளது. அண்மையில் கூட எனது முஸ்லிம் தோழன் ஒரு இந்து பெண்ணை மணந்துள்ளான். ( விவரங்கள் வேண்டாமே ) யாரும் எதிலும் மதம் மாறவில்லை, தமது விருப்பத்திற்கு ஏற்ப வாழ்ந்து வருகின்றார்கள். ஆகவே இசங்களை எதிர்க்கும் போது இசங்களோடு அடையாளப்பட்டு ஒதுங்கி வாழ்வோரை நிந்திப்பதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். நன்றிகள் !

      Delete
  18. வேகநரி!மத சடங்குன்னா ஹதிஸ் வாசிப்பும்,ஸ்லோகம் சொல்வதும் ஒரு நேர்க்கோட்டில் வந்து விடுமென நினைக்கின்றேன்:)

    ReplyDelete
  19. //என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கானோரும் திராவிடக்கொள்கைகளை அறியச்செய்தவர் வீரமணி.//

    ம், இதெல்லாம் வீரமணி, கருணாநிதி ஆரம்பகாலத்தில் அரசியலில் காலூன்றிய போது நடைபெற்றிருக்கலாம், ஆனால் இருவருக்கும் வாரிசுகள் வளர்ந்துவிட்டதால் அவர்கள் தற்போது வளர்ப்பவை எவை என ஒப்பிட இன்றும் அவர்களை அதற்காகப் போற்ற வேண்டுமென்பதில்லை, உங்களுக்கு கருணாநிதியின் வசை மொழியில் வீரமணி பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால் "போயாஸ் தோட்டத்து பூசாரி" வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  20. // பார்ப்ப‌ன‌ர்க‌ளுக்குப் பிற‌ந்த‌வ‌ர்க‌ள் கூட‌ பார்ப்ப‌ன‌ எதிர்ப்புத் திராவிட‌ அர‌சிய‌லின் துணையுட‌ன் அர‌சிய‌லுக்கும், திரையுல‌குக்கும் வ‌ருகிறார்க‌ள், எதிர்கால‌த்தில் திராவிட‌த்த‌லைவ‌ர்களாக‌ வ‌ருவத‌ற்கும் வாய்ப்புண்டு. அதிலுள்ள‌ முர‌ண்பாட்டைத் தான் நான் குறிப்பிட்டே//

    வியாசன்,

    திராவிடத் தலைவர்களில் ஒருவராக ஏற்கனவே ஜெ வந்துவிட்டார்,பார்பனர்களின் வாரிசுகளும் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என்பவை பொருளற்ற வாதங்கள், ஜெ ஒரு பார்பனர் என்பதற்காக காஞ்சி மட சாமிக்கு கருணை காட்டவில்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது

    ReplyDelete
    Replies
    1. உங்க‌ளின் ம‌ன‌ச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க‌ள் ஜெ உண்மையில் திராவிட‌த் த‌லைவ‌ரா? பார்ப்ப‌ன‌ர்க‌ளை எதிர்க்க‌வென்று, பார்ப்ப‌ன‌ர்க‌ளைத் த‌விர்த்து ம‌ற்ற‌வ‌ர்க‌ள‌னைவ‌ரையும் உள்ள‌ட‌க்கிய‌தாக‌ ஒரு இய‌க்க‌த்தை உருவாக்கி, தொண்ட‌ர்க‌ளில் பெரும்பான்மையின‌ர் த‌மிழ‌ர்களாக‌ இருந்தும், ஒரு சில‌ த‌மிழர‌ல்லாத‌வ‌ர்க‌ள் த‌லைமை வ‌கித்த‌தால், அவ‌ர்க‌ளுக்காக‌ 'திராவிட‌' என்ற‌ பெயரைச் சூட்டி, பார்ப்ப‌ன‌ எதிர்ப்பின் அடிப்ப‌டையில் த‌மிழ்நாட்டில் ஒரு இய‌க்க‌த்தைக் க‌ட்டியெழுப்பி, அந்த‌ இய‌க்க‌த்திலிருந்து உருவான‌ அர‌சிய‌ல் க‌ட்சிகளிலொன்றை அப்ப‌டியே கொண்டு போய் ஒரு பார்ப்ப‌ன‌ப் பெண்ணின் கால‌டிக‌ளில் போட்டு விட்டு, அந்த‌ பார்ப்ப‌ன‌ப்பெண்ணையும் திராவிட‌த் த‌லைவ‌ர் என‌ வாதாடும் வ‌க்கிர‌த்தை த‌மிழ்நாட்டில் ம‌ட்டும் தான் காண‌ முடியும். ஜெ த‌ன்னைத் திராவிட‌ர் என‌ எப்போதாவ‌து குறிப்பிட்ட‌துண்டா ஆனால் நான் ஒரு பாப்பாத்தி தான் என்று ச‌ட்ட‌ம‌ன்ற‌த்திலேயே வெளிப்ப‌டையாக‌க் கூறிய‌தாக‌ ஒரு க‌ட்டுரையில் ப‌டித்த‌ நினைவுண்டு. ஜெ காஞ்சி ம‌ட‌சாமிக்குக் க‌ருணை காட்ட‌வில்லை என்ப‌து ம‌ட்டும் அவ‌ரை திராவிட‌த்த‌லைவ‌ராக்குவ‌த‌ற்கான த‌குதி என்றால் அவ‌ர் த‌மிழ‌ன் பிர‌பாக‌ர‌னை இந்திய‌ இராணுவ‌த்தைய‌னுப்பி பிடித்து வ‌ர‌வேண்டுமென்று கூட‌த்தான் ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தில் தீர்மான‌ம் கொண்டு வ‌ந்தார். அது எல்லாம் வெறும் அர‌சிய‌ல். அவ‌ர் திராவிட‌க் க‌ட்சியின் பின்க‌த‌வால் நுழைந்து திராவிட‌ர்க‌ளிட‌மிருந்து க‌ட்சியைக் க‌ட‌த்திப் போய்விட்டார் என்று வேண்டுமானால் கூறலாமே த‌விர‌ அவ‌ர் திராவிட‌த்த‌லைவ‌ர் ஆகிவிட்டார் என்ப‌தெல்லாம் வெறும் ப‌ம்மாத்து. என்னைப் பொறுத்த‌ வ‌ரையில் பார்ப்ப‌ன‌ர்க‌ளும் த‌மிழ‌ர்க‌ள் தான், அத‌னால் ஜெயல‌லிதா ஒரு த‌மிழ‌ச்சி, த‌மிழ்நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளில் எனக்குப் பிடித்த‌ அர‌சிய‌ல்வாதியும் அவ‌ர்தான் என்ப‌து முற்றிலும் வேறு விட‌ய‌ம். இந்த‌ திராவிட‌ என்ற‌ சொல்லே இக்கால‌த்தில் த‌மிழ‌ர்க‌ளுக்குத் தேவையில்லாத‌ ஒன்று.

      Delete
  21. அருமையான விளக்கக் கட்டுரை அண்ணா! - என்ன திடீரென்று பெரியார் மீது, மதவெறியர்கள் பாய்கிறார்களே என்று நினைத்தேன்! இப்போதுதான் புரிகிறது.
    சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன?

    ReplyDelete
  22. @viyasan

    //இந்த‌ திராவிட‌ என்ற‌ சொல்லே இக்கால‌த்தில் த‌மிழ‌ர்க‌ளுக்குத் தேவையில்லாத‌ ஒன்று.//
    உண்மையிலேயே திராவிடம் என்ற ஒன்று இருந்ததா என்பதே கேள்விக்கு குறிதான். இந்தியாவில் திராவிட ஆரிய இனப்பிரிவுகள் தனியானவை என்பதே கட்டுகதை என தற்கால ஆராய்ச்சிகள் விளம்புகிற உண்மை.

    பிறமொழி பேசுபவர்கள் (ஆங்கிலேய உதவியுடன்)தமிழ்நாட்டில் காலுன்ற பயன்படுத்திய வார்த்தை திராவிடம். இது தமிழ்நாட்டை தாண்டி மற்ற திராவிட ஏரியாக்களில் விற்பனை ஆகவே இல்லை. தமிழ்நாட்டில் திராவிடம், பார்பானியம் போன்ற சொல்லாடல்கள் அரசியல்களத்தில் காலத்திற்கும் வசதிக்கும் ஏற்றது போலவே பயன்படுத்தப்படும் சொற்கள். இவை உம்மைப் போன்ற ஈழத்தமிழருக்கு பெருங்குழப்பத்தை விளைவிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.



    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனத்தான், தமிழகத்தில் கற்பனை திராவிடம், பார்பானி துவே ஷம் பேசியே பலர் செல்வந்தர்களாவிட்டார்கள் என்பது கவனிக்கதக்கது.

      Delete
    2. திராவிடம் என்பது இனம் சார்ந்த உயிரியல் சார்ந்த அடையாளம் என்பதை விடவும் கலாச்சாரம் மற்றும் மொழி சார்ந்த ஒரு அரசியல் அடையாளம் என்பதே ஆகும். திராவிட அடையாளங்களின் ஆணிவேரே அதன் தொன்ம மொழி மற்றும் கலாச்சார கூறுகளை மையக் கருவில் கொண்டுள்ளது. திராவிட என்ற பெயர் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட போதும், திராவிட அல்லது தமிழ் மொழி சார்ந்த, அல்லது ஆரியமற்ற தென்னாட்டு மொழி சார்ந்த மக்களும், வாழ்வியலும் கற்பனைகள் என்றுக் கூறிவிட முடியாது... ! உலகில் எந்தவொரு அடையாளமும் உயிரியல் சார்ந்தத்தை விட வாழ்வியல் சார்ந்தவைகளாக மண்ணின் அடையாளத்தோடு எழுப்பப்பட்டது. என்று வடக்கில் இருந்து மக்கள் தென்னாட்டுக்கு படையெடுக்கத் தொடங்கினார்களோ அன்றிலிருந்து தென்னாட்டவர் தனித்தன்மையை போற்றவே முயல்கின்றார்கள். முழு திராவிடம் என்றக் கோட்பாட்டில் தமிழர் தவிர்த்து ஏனையோர் ஆர்வம் காட்டவில்லை என்ற போதும், திராவிடம் என்ற தனித்துவம் சார்ந்த ஒன்றை மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அத்தகைய தனித்தன்மை ஒன்று உள்ளதை மறுதலிக்க அல்லது மறைக்க பெரிதும் துணையாக இருப்பது மதம் சார்ந்த அடையாள மோகங்களே !!! பார்ப்பன துவேஷம் என்பது தமிழ்நாட்டில் மட்டும் தோன்றியதல்ல, வடக்கில் எழுந்த வினோபா பூலே, அம்பேத்கார், முதலாக எண்ணற்ற மண்ணின் மைந்தர்கள் சார்ந்த இயக்கங்கள் கூட கொண்டுள்ள ஒன்றே, இன்று அவை காணமால் போனதாக பரப்புரை செய்வது முறையற்ற ஒன்று. பார்ப்பன - ஆரிய அல்லது ஐரோப்பிய, அராபிய என்று எந்தவொரு மேன்மையையும் இந்திய பூர்விக மக்களை நசுக்கவே பயன்படுகின்றது. தலித்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், பார்ப்பனர்களும் எல்லோரும் ஓரே இந்தியர் என்ற எண்ணம் வரும் வரை இந்த பிளவுகள் நீடித்துக் கொண்டே இருக்கும்...

      Delete
  23. மற்றவர்கள் மறுதலித்த நிலையில் எதற்காக, இருந்ததா அல்லது இல்லையா என சர்ச்சை எழும் திராவிடத்தை தமிழ் மொழி பேசுவோர் மட்டும் பிடித்து தொங்க வேண்டும்? இதனால் தமிழனுக்கு என்ன நன்மை?

    இரு இனக்குழுக்குள் அருகருகே வசிக்கும் நிலையில் அவர்களுக்குள் கலாச்சார ஒற்றுமை ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இதை வைத்து அவர்கள் ஒரே இனத்தவராகவே இருந்தவர் என்று சொல்லுவது சரியா?

    பெரியார் காலத்தில் பிற மாநிலத்தவர் கூடி ஒரு அமைப்பினை உருவாக்கிட முயன்றனர். அதற்கு உதவியாக தென்னிந்தியா ஒன்றாக சென்னை மகாணமாக இருந்தது.மேலும் பிரிட்டிஷ்காரர்கள் அவிழ்த்துவிட்ட அறிவியல் முலாம் பூசப்பட்ட புரட்டுகள் திராவிட-ஆரிய பிரிவினைக்கு வலு சேர்த்தன.

    ஆனால் இப்போது மற்ற மொழி பேசுவோர் திராவிடத்தை ஒப்புகொள்ளாது பிரிந்து சென்றுவிட்டார்கள். அறிவியல் லெமூரியா போன்ற திராவிட அறிவிஜீவிகள் அவிழ்த்து விட்ட fairy tales-களை நிராகரித்து விட்டது. இன்று நிதர்சனமாக இருப்பது தமிழினம் மட்டுமே.

    தமிழ்நாட்டில் பெரியாரின் முயற்சியால் பார்பானிய சக்திகள் வலு இழந்து, தற்போது திராவிட சக்திகள் அதாவது பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சக்திகளால் கீழ்நிலை மக்கள் அல்லுறுகின்றனர். இதற்கும் பார்ப்பானியம் என பெயர் சூட்டி தப்பிக்க பார்ப்பது அயோக்கியத்தனம். ஆகவே மதவாதிகளின் புத்தங்களை எப்படி காலத்திற்கு ஒவ்வாது என நிராகரிக்கின்றோமோ, திராவிடமும் அங்கணமே தவிர்க்கப்பட வேண்டியதே.

    தமிழர், இந்தியர் என தாண்டி மனிதனே ஒரு இனக்குழுவாக மாறவேண்டும் என்பதே எமது நிலை.

    ReplyDelete
    Replies
    1. //தமிழர், இந்தியர் என தாண்டி மனிதனே ஒரு இனக்குழுவாக மாறவேண்டும் என்பதே எமது நிலை. // ஆமோதிக்கின்றேன் ... !

      ஆனாலும் தமிழ் என்ற மொழி காக்கப்படல் வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை ... ! அது எனது தனிப்பட்ட விருப்பம் ..!

      Delete
    2. //ஆனாலும் தமிழ் என்ற மொழி காக்கப்படல் வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை ... ! அது எனது தனிப்பட்ட விருப்பம் ..!//

      த‌மிழ் மொழி காக்க‌ப்ப‌டுவ‌தற்கு, த‌மிழ‌ர்க‌ளின் நில‌ம் காக்க‌ப்ப‌ட‌ வேண்டும், த‌ம‌து சொந்த‌ நில‌த்தை இழந்த‌ எந்த‌ இன‌மும் த‌ம‌து மொழியையும் க‌லாச்சார‌த்தையும் காத்த‌தில்லை.

      Delete
  24. //பிறமொழி பேசுபவர்கள் (ஆங்கிலேய உதவியுடன்)தமிழ்நாட்டில் காலுன்ற பயன்படுத்திய வார்த்தை திராவிடம். இது தமிழ்நாட்டை தாண்டி மற்ற திராவிட ஏரியாக்களில் விற்பனை ஆகவே இல்லை.//

    திராவிட மொழிக் குடும்பமும் அதன் மொழிகளும் இந்திய மொழிகளில் மாறுபட்டவை, தமிழ் நாட்டைத் தாண்டி விற்பனை செய்ய முயற்சித்தார்களா ? என்று தெரியவில்லை. நடிகர் சங்கத்தை தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரிலிருந்து தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றவே பல முட்டுக்கட்டைகள் இருந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    திராவிடம் என்ற சொல்லாட்சியை தமிழ் தலைமை ஏற்பதால் கன்னடம், தெலுங்கு மொழிப் பேசுபவர்கள் அதனை ஏற்பதில்லை, கன்னடர்களின் மொழிப் பற்று நமக்கு தெரிந்தவை தான், அவர்களிடம் சென்று திராவிட மொழிகளுக்கு தமிழெ அடிப்படை என்றால் ஒப்புக் கொள்வார்களா, இது வெறும் ஈகோ சார்ந்த விடயம், அவர்கள் ஒப்புக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் தென்னிந்திய மொழிகள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தது என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது.

    மொழி அடிப்படையில் தமிழ் வடமொழியில் இருந்து உருப்பெறவில்லை என்று சான்றுகளுடன் விளக்க திராவிட சித்தாந்தம் கைகொடுத்தது, எனவே திராவிட சித்தாந்தம் முற்றிலும் தோல்வி என்று சொல்ல இயலாது, அரசியல் நிலைப்பாடுகளினால் அதனை தென்மாநிலத்தவர் அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் தோற்றுப் போன சித்தாந்தம் என்று சொல்ல முடியாது.

    திராவிட மொழிகள், மற்றும் அதன் நிலம் சார்ந்த அடிப்படை அரசியலையும் தனித்தனியாகப் பார்த்தால் திராவிட சித்தாந்தகளினால் நன்மை அடைந்தது தமிழ் மொழி. திராவிட என்ற சொல் ஆங்கிலர் உருவாக்கிய சொல்லும் அன்று, திராவிட சிசு என்ற சொல் ஆறாம் நூற்றாண்டில் வழக்கத்தில் இருந்தது.

    இங்கிலீஸை ஆங்கிலம் (நாம அப்படி சொல்வது வெள்ளைக்காரனுக்கு தெரியாது) என்று நாம் சொல்வது போல் வடமொழியாளர்கள் தென்மொழிகளின் ஒட்டுமொத்தப் பெயராக திராவிட என்று சொல்லிவந்தனர்.

    ReplyDelete
    Replies
    1. @திரு.கோவி க‌ண்ண‌ன்,

      //திராவிட மொழிகள், மற்றும் அதன் நிலம் சார்ந்த அடிப்படை அரசியலையும் தனித்தனியாகப் பார்த்தால் திராவிட சித்தாந்தகளினால் நன்மை அடைந்தது தமிழ் மொழி.//
      த‌ய‌வு செய்து ஒரு ப‌திவில் திராவிட‌ சித்தாந்த‌த்தினால் த‌மிழ் மொழி அடைந்த‌ ந‌ன்மையைப் ப‌ற்றி விள‌க்குங்க‌ள்.

      //திராவிட என்ற சொல் ஆங்கிலர் உருவாக்கிய சொல்லும் அன்று,. //

      திராவிட‌ருக்கு முன்பாக‌வே த‌மில(damila) என்ற‌ சொல் 2000 வ்ருட‌ங்க‌ளுக்கு முன்பாக‌வே பாளி மொழியில் இல‌ங்கையின் மகாவ‌ம்ச‌த்தில் த‌மிழ‌ர்களைக் குறிக்கிற‌து. ம‌காவ‌ம்ச‌த்தில் சிங்க‌ள‌ என்ற‌ பெய‌ரே கிடையாது, ஆனால் த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ற்றி ப‌ல‌முறை குறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அத‌னால் திராவிட‌ என்ற‌ சொல்லை விட‌ ப‌ண்டைக்கால‌ம் தொட்டு த‌மிழ‌ர் என்ற சொல் தான் த‌மிழ‌ர்க‌ளைக் குறிக்க‌ப்பாவிக்க‌ப்ப‌ட்ட‌து. திராவிட‌ இய‌க்க‌ங்க‌ளின் த‌மிழ‌ர்ல்லாத‌ தெலுங்கு, க‌ன்ன‌ட‌த் த‌லைவ‌ர்க‌ளுக்கு த‌மிழ‌ர் க‌ழ‌க‌ம் என்ற‌ பெய‌ரில் பார்ப்ப‌ன‌ர்க‌ளுக்கெதிராக ஒன்று ப‌ட‌ அவ‌ர்க‌ளின் இன‌, மொழிப்ப‌ற்று இட‌ம் கொடுக்க‌வில்லை. அத‌னால் தான் திராவிட‌ம் என்ற‌ ப‌தத்தையும், கொள்கையையும் த‌மிழ‌ர்க‌ள் த‌லையில் க‌ட்டி, ம‌லையாளிக‌ளும், கன்னட‌ர்க‌ளும், தெலுங்க‌ர்க‌ளும் த‌ம‌க்கென‌ சொந்த‌மாக‌ மாநில‌ங்க‌ளை முழுமையாக‌ வைத்துக் கொண்டு, த‌மிழ்நாட்டை ம‌ட்டும் திராவிட‌ர்க‌ள் எல்லோருக்கும் ப‌ங்கு போட்டார்க‌ள். உல‌க‌த்த‌மிழ‌ர்க‌ளனைவ‌ரையும், எந்த‌ வித‌ ஐய‌ப்பாடும் இல்லாம‌ல் அடையாளப்ப‌டுத்த‌ த‌மிழ‌ர் என்ற‌ சொல் எங்க‌ளிட‌மிருக்கும் போது, பெரியார் சொன்னார் என்ப‌த‌ற்காக‌ அந்த‌ திராவிட‌த்தை இன்னும் ஏன் க‌ட்டிய‌ழ‌ வேண்டும் என்ப‌தைத் தான் என்னால் புரிந்து கொள்ள‌ முடிய‌வில்லை.

      Delete
    2. //திராவிட சிசு என்ற சொல் ஆறாம் நூற்றாண்டில் வழக்கத்தில் இருந்தது//
      செள‌ந்த‌ர்ய‌ல‌க‌ரியில் திராவிட‌ சிசு என‌க்குறிப்பிட‌ப்ப‌டுவ‌து பிராம‌ண‌ராகிய‌ திருஞான‌ச‌ம்ப‌ந்த‌ரை, அப்ப‌டியானால் பார்ப்பன‌ர்க‌ளும் திராவிட‌ர்க‌ளே, அவ‌ர்க‌ளை எதிர்த்து ஒரு இய‌க்க‌த்தைத் தொட‌ங்கி அத‌ற்கு அவ‌ர்களையும் குறிக்கும் திராவிட‌ என்ற‌ பெய‌ரை வைத்த‌து புத்திசாலித்த‌ன‌மான‌ செய‌லாக‌ என‌க்குத் தெரிய‌வில்லை.

      த்வ சத்ன்யாம் மான்யே தாரணிதாரா கன்யே ஹிருதயதா
      பய பராப்ஹார பரிவஹதி சாரச்வத்மியா
      தஹயவாத்யா தாட்தம் திரமிட சிசு ராசவத்யா தாவா யாத்
      காவீனம் ப்ரோயுதனா மஜானி காமனியா கவாயிதா

      ஆதி சங்கரர் பாடிய செளந்தர்ய லஹரியில் 75வது பாடல் செளந்தர்ய லஹரி என்பது ஒரு மனிதனுக்கு தேவையான ஒவ்வொரு வல்லமையையும் தர வேண்டி சொல்லி அம்மனின் செளந்தர்யத்தை புகழ்ந்து பாடும் பாடல். அப்படி கவிதை புனையும் வல்லமை தர வேண்டி பாடிய பாடல் இது.

      க‌ருத்து:

      மலைகளின் அரசனின் மகளே(பார்வதி), நான் நினைக்கிறேன் உனது மார்பில் இருந்து வரும் பால் தான் கல்வியின் கடவுளாக இருக்கவேண்டும். கல்வி எனும் மாபெரும் அலையை உருவாக்கவல்லது அது, நீ பால் கொடுத்ததால் அந்த கருணையால் தென்னகத்து குழந்தை ஒன்று கவிஞர்கள் அனைவருக்கும் அரசனாகிவிட்டான்.. அவனுடைய பாடல்கள் ஒருவனின் இதயத்தை திருடிவிட்டது.

      Delete
  25. //டு போய் ஒரு பார்ப்ப‌ன‌ப் பெண்ணின் கால‌டிக‌ளில் போட்டு விட்டு, அந்த‌ பார்ப்ப‌ன‌ப்பெண்ணையும் திராவிட‌த் த‌லைவ‌ர் என‌ வாதாடும் வ‌க்கிர‌த்தை த‌மிழ்நாட்டில் ம‌ட்டும் தான் காண‌ முடியும்.//

    கறிக்கடை நடத்துபவர் ஒரு பார்பனர் என்பதற்காக அவர் விற்பது கத்திரிக்காய் என்றாகிவிடாது. கறிக்கடை நடத்துபவருக்கே இல்லாத கூச்சம் நமக்கு ஏன் ? ஜெ கட்சிப் பெயரை மாற்றவில்லை. இன்னும் சொல்லப் போனால் முக்கியமாக தாழ்த்தப்பட்டவர் மற்றும் பிற்பட்டோர் நலனுக்கான இட ஒதுக்கீடு 69 விழுக்காட்டை கட்டிக்காத்ததில் ஜெவின் பங்கு மிகப் பெரியது.

    பார்பான் இப்படித்தான் இருப்பான் என்பது போன்ற உங்கள் அடிப்படைவாதம் தாழ்த்தப்பட்டவர்களும் அப்படியே தான் இருப்பார்கள் என்கிற கருத்தையும் மறைமுகமாகவே திணிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ///கறிக்கடை நடத்துபவர் ஒரு பார்பனர் என்பதற்காக அவர் விற்பது கத்திரிக்காய் என்றாகிவிடாது. கறிக்கடை நடத்துபவருக்கே இல்லாத கூச்சம் நமக்கு ஏன் ?///
      க‌றிக்க‌டையை பார்ப்ப‌ன‌ரின் க‌டைக்கு எதிர்க்க‌டையாக‌த் தொட‌ங்கி விட்டு, அந்த‌க் க‌டையை இன்னுமொரு பார்ப்ப‌ன‌ரின் பொறுப்பில் விடுவ‌து ச‌ரியான‌ வியாபார‌ உத்தியாக‌ என‌க்குத் தெரிய‌வில்லை. :)



      ///பார்பான் இப்படித்தான் இருப்பான் என்பது போன்ற உங்கள் அடிப்படைவாதம் தாழ்த்தப்பட்டவர்களும் அப்படியே தான் இருப்பார்கள் என்கிற கருத்தையும் மறைமுகமாகவே திணிக்கிறது.//
      பார்ப்பன‌ர்க‌ளின் ம‌னுவாத‌ம், அவ‌ர்க‌ள் பார்ப்பன‌ர‌ல்லாத‌வ‌ர்க‌ளுக்குச் செய்த‌ கொடுமைக‌ள், அள‌வுக்க‌திக‌மாக‌ ச‌லுகைக‌ளை அனுப‌வித்த‌மை, க‌ல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெரிய‌ ப‌ங்கை அவ‌ர்க‌ள் எடுத்துக் கொண்ட‌மை அவ‌ர்க‌ளின் தீண்டாமைக் கொள்கை என்ப‌வ‌ற்றை எதிர்த்துக் க‌ட்சி தொட‌ங்கி, இன்றும் அந்த‌க் கொள்கைக‌ளின் அடிப்ப‌டையில் திராவிட‌ இய‌க்க‌ங்க‌ளை ந‌ட‌த்திக் கொண்டு, தொண்ட‌ர்க‌ளுக்கும் பார்ப்ப‌ன‌ எதிர்ப்பையும், பெரியாரிச‌த்தையும் போதித்துக் கொண்டே, திராவிட‌ த‌லைவ‌ர்க‌ள் ம‌ட்டும் பார்ப்ப‌ன‌ர்க‌ளின் இர‌த்த‌ உற‌வின‌ர்க‌ளாக‌ மாறுகிறார்க‌ளே இது நியாய‌மா என‌ நான் கேட்ட‌த‌ற்கு, நான் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளைப் ப‌ற்றிக் க‌ருத்துத் தெரிவிப்ப‌தாகக் நீங்க‌ள் கூறுவ‌து பொருத்த‌மாகத் தெரிய‌வில்லை. என்னுடைய‌ க‌ருத்தெல்லாம், இக்கால‌த்திலும் பார்ப்ப‌ன‌ எதிர்ப்பு தேவைய‌ற்ற‌து ஏனென்றால் ஒரு பார்ப்ப‌ன‌ப் பெண் திராவிட‌க் க‌ட்சியில் முத‌ல‌மைச்ச‌ராக‌ உள்ளார், மற்ற‌ திராவிட‌க் க‌ட்சியின் எதிர்கால‌த் த‌லைவ‌ர் பார்ப்ப‌ன‌ப் பெண்ணை ம‌ண‌ந்துள்ளார். அத‌னால் த‌லைவ‌ர்க‌ளே பார்ப்ப‌ன‌ர்க‌ளை எதிர்க்காத‌ போது தொண்ட‌ர்க‌ள் ஏன் எதிர்க்க‌ வேண்டும் என்ப‌து தான்.

      Delete
  26. /// தென்னிந்திய மொழிகள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தது என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது.

    மொழி அடிப்படையில் தமிழ் வடமொழியில் இருந்து உருப்பெறவில்லை என்று சான்றுகளுடன் விளக்க திராவிட சித்தாந்தம் கைகொடுத்தது, எனவே திராவிட சித்தாந்தம் முற்றிலும் தோல்வி என்று சொல்ல இயலாது, அரசியல் நிலைப்பாடுகளினால் அதனை தென்மாநிலத்தவர் அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் தோற்றுப் போன சித்தாந்தம் என்று சொல்ல முடியாது/


    சகோ இசெ சரியாக குறிப்பிட்டது போல ஆரிய- திராவிட என்பது தனித்தனியே இனங்கள் அல்ல என ஜெனடிக் ஆராய்ச்சிகள் நிரூபித்துவிட்ட நிலையில், திராவிடம் என்பதை ஒரு மொழி குடும்பமாகவே கருத முடியும். ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை உண்டு. மற்ற திராவிட மொழிகள் தமிழ் பேசியவர்கள் சம்ஸ்கிருதம் கலந்ததால் உண்டானவை. அவற்றை பேசுபவர்கள் சம்ஸ்கிருதத்தை மதிப்பது போல் தமிழை மதிப்பதில்லை. அதாவது அவர்களின் மொழியை தமிழுடன் அடையாளப்படுத்த விரும்பாத நிலையில் தமிழர் எதற்காக திராவிடர் என அனைவரையும் அரவணைக்க வேண்டும்? தன்னை தமிழன் எனவே சொல்லிக் கொண்டு போகலாமே? திராவிடம் தோல்வியா வெற்றியா என்பதைவிட இப்போதைக்கு தமிழனுக்கு தேவையற்றது என்பது எமது நிலை.

    ReplyDelete
  27. திராவிடம் என்றால் தற்போது ஒடுக்கப்பட்டவர் என அர்த்தம் என திராவிட ஆதரவு குரூப்கள் தரும் புது விளக்கத்தை அளித்து மண்டை காயவிடாத சகோக்களுக்கு பெசல் நன்றி. இப்போதெல்லாம் எடக்கு மடக்கா மாட்டிக்கொண்டால் இந்த மாதிரி புது அர்த்தமெல்லாம் கொடுத்து கொலையாக் கொல்கிறார்கள்.

    ReplyDelete
  28. //த‌ய‌வு செய்து ஒரு ப‌திவில் திராவிட‌ சித்தாந்த‌த்தினால் த‌மிழ் மொழி அடைந்த‌ ந‌ன்மையைப் ப‌ற்றி விள‌க்குங்க‌ள்.//

    தனித்தமிழ் இயக்கம் பற்றி இணையங்களில் தேடிப்படிக்கவும்

    //பெரியார் சொன்னார் என்ப‌த‌ற்காக‌ அந்த‌ திராவிட‌த்தை இன்னும் ஏன் க‌ட்டிய‌ழ‌ வேண்டும் என்ப‌தைத் தான் என்னால் புரிந்து கொள்ள‌ முடிய‌வில்லை.//

    இங்கே யாரும் திராவிடர்கள் என்ற பெயரில் அண்டைமாநிலங்களில் கட்டிப்பிடித்துக் கொண்டும் இல்லை, ஆரியம் என்ற சொல்லுக்கு எதிராக வலுவான கட்டமைப்பை உண்டாக்க அந்த சொல் பயன்பட்டது, அதன் தேவைகள் தற்பொழுது குறைவு, இதை உணர்ந்து தான் சீமான் 'நாம் தமிழர்' என்று இயக்கத்திற்கு திராவிட சாராத மாற்றுப் பெயர் வைத்துள்ளார், நீங்கள் நினைப்பது போல் மாற்றங்கள் ஒரே நாளில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஏற்பட்டுவிடாது.

    சைவம் - வைணவம் ஒருபிரிவுகளாக ஒருவொருக்கொருவர் கொன்றொழித்தனர், இன்றைக்கு தமிழ்நாட்டைப் பொறுத்த பார்பனர் பாதுகாப்பு என்ற அளவில் சைவ வைணவ பார்பனர்கள் தம்மை வேறுபடுத்திப் பார்ப்பது இல்லை. தமிழுக்கு திராவிட ஒட்டுத் தேவையில்லாத பொழுது அதுவும் தானாகவே விலகிவிடும்

    ReplyDelete
  29. //சகோ இசெ சரியாக குறிப்பிட்டது போல ஆரிய- திராவிட என்பது தனித்தனியே இனங்கள் அல்ல என ஜெனடிக் ஆராய்ச்சிகள் நிரூபித்துவிட்ட நிலையில், //

    இதையெல்லாம் நீங்கள் பார்பனர்களிடம் தான் சொல்ல வேண்டும், தலையில் இருந்து பிறந்ததால் அவர்கள் ஜெனிட்டிக்ஸ் அடிப்படையில் வேறானவர்கள் என்று தான் நம்புகிறார்கள், அதை தாம் மறந்துவிட நேரிடுமே என்று நினைவுபடுத்திக் கொள்ள பூணூல் அணிகிறார்கள்.

    என்னைப் பொருத்த அளவில் உலகில் எந்த மனித இனப் பெண்ணின் கருமுட்டையும் மற்றொரு மனித இனத்தின் ஆண் விந்துடன் கலக்கக் கூடியதே, அதன் பின் குழந்தையும் பிறக்கும் அதன் பிறகே ஜெனிடிக்ஸ் வேறுபாடுமாறுபாடு எல்லாம்.

    :)

    ReplyDelete
  30. சகோ வேகநரி
    // தமிழகத்தில் கற்பனை திராவிடம், பார்பானி துவே ஷம் பேசியே பலர் செல்வந்தர்களாவிட்டார்கள் என்பது கவனிக்கதக்கது.//

    நாடு, மதம், மொழி, இனம் போன்றவற்றில் தேவையில்லாவிடினும், பற்று இருக்கலாம். அது வெறியாக மாறினால் பல இன்னல்களை சந்திக்கவேண்டும்.நம்மை சுரண்டி பலபேர் பெரியாளக ஆகிவிடுவார்கள். இதனாலேயே இவற்றில் எமக்கு அதீத உணர்வுகள் இந்த விடயங்களில் இல்லை. நம் முப்பாட்டன் சொன்னபடி "யாதும் ஊரே, யாவரும் கேளிர்தான்"

    ReplyDelete
  31. //இதையெல்லாம் நீங்கள் பார்பனர்களிடம் தான் சொல்ல வேண்டும்,//

    அவர்கள் மட்டும் உணர்ந்தால் பத்தாது. அந்த அசிங்கம் நாம் அனைவர் மீதும்தான் உள்ளது. எங்களுரில் நரிகுறவர் இன மக்களை தலித் மக்களின் திருமணத்தில் உணவருந்த அனுமதிக்காத கதையும் உண்டு. இத்தனைக்கும் நரிகுறவர்கள் BC என நினைக்கிறேன்.

    பார்ப்பனர் எனும் சிறுபான்மை சாதி மற்ற அனைவரையும் சாதியத்திற்குள் தள்ளியது என்பதே ஒரு பெரும்பான்மைக்கு ஒரு சிறுமைதான். மற்றவர்க்கு மூளை என்பதே இல்லையா? ஆனால் சாதி என்பது நமக்கும் சில அடிமை சிக்குவான் என மற்ற சாதிக்காரனுகளும் ஏற்றுக் கொண்டதுதான். இரத்தம் பார்ப்பான் கையிலும் மட்டுமல்ல, நம் கையிலும் உண்டு!

    ReplyDelete
  32. //பார்ப்பனர் எனும் சிறுபான்மை சாதி மற்ற அனைவரையும் சாதியத்திற்குள் தள்ளியது என்பதே ஒரு பெரும்பான்மைக்கு ஒரு சிறுமைதான். மற்றவர்க்கு மூளை என்பதே இல்லையா? ஆனால் சாதி என்பது நமக்கும் சில அடிமை சிக்குவான் என மற்ற சாதிக்காரனுகளும் ஏற்றுக் கொண்டதுதான். இரத்தம் பார்ப்பான் கையிலும் மட்டுமல்ல, நம் கையிலும் உண்டு!//

    முனியாண்டி, காட்டேறி, பெரியாச்சி, கங்கம்மா, மதுரைவீரன் இன்னும் பல நாட்டார் தெய்வங்களெல்லாம் யாரைக் கேட்டு இந்து மதத்திற்குள் நுழைக்கப்பட்டார்கள் ? இதெல்லாம் அவங்களுக்கு தெரியுமா ? :) அது போல் தான், பார்பனர் தம்மை பிராமணார் என்று அறிவித்துக் கொண்டு மற்றவர்களை கீழானவர்கள் என்று முத்திரை குத்தினார்கள், அதை நம்பி சத்திரியப் பட்டம் பெற்றுக் கொண்ட மன்னர்கள் அதை ஆமோதித்தார்கள், தற்பொழுது அனைவரின் சாயமும் வெளுத்து விட்டது.

    நான் தனிமனிதர்களை அவர்கள் 'குலம்' என்பதற்காக எந்த தனிப்பட்ட மரியாதையும் கொடுப்பது இல்லை, தனிமனிதனின் நற்பண்புகளுக்காக மதிப்பதுண்டு.

    இந்துமதம் என்ற பெயரில் கிறித்துவ, இஸ்லாமியர் அல்லாதவரை ஒன்றாக அடைத்து வைத்திருப்பதில் தான் நாமும் இருக்கிறோம், நாமே விரும்பினாலும் அதனை மீறி நம்மால் வெளியே வர முடிகிறதா ? சில சூழ்ச்சிகளை வெல்ல காலம் எடுக்கும், அதற்காக அவற்றை ஏற்றுக் கொண்டோம், முட்டாள் தனமாக இருந்தோம் என்று பொருளில்லை, கத்தி முன்னால் பாய்ந்தால் தடுக்க முயற்சித்திருக்கலாம், பின்னால் இருந்து குத்துவதை காயம் பட்ட பிறகு தான் உணரவே முடியும், அதற்காக மடத்தனமாக முதுகை ஏன் காட்டிக் கொண்டு இருந்தாய் என்று கேட்பது அறிவிப்பூர்வமான கேள்வியல்ல, மாறாக முதுகில் குத்துபவர்கள் இருக்கிறார்கள் என்று நம்புவது நலம் :)

    ReplyDelete
  33. மன்னிக்கவும் கோவியாரே, உங்களுடைய பதிலை தூக்க கலக்கத்தில் தவறாக புரிந்து கொண்டு எழுதிய பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். இங்கு நடு இரவு. தவறுக்கு வருந்துகிறேன்.மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  34. //ஆரியச் சக்கரவர்த்திக்கள் எனப்படும் பார்ப்பன தமிழ் மன்னர்களின் ஆட்சியில் தான் கேரளம், தமிழகத்தில் இருந்து குடியேறிய வேளாளர்கள் ஆதிக்கம் பெறத் தொடங்கினார்கள்.//


    @இக்பால் செல்வ‌ன்,

    ம‌ன்னிக்க‌வும். உங்க‌ளின் ப‌திலை இப்பொழுது தான் க‌வ‌னித்தேன். யாழ்ப்பாண‌த்த‌ர‌ச‌ ப‌ர‌ம்ப‌ரையாகிய‌ ஆரியச்ச‌க்க‌ர‌வ‌ர்த்திக‌ளில் வ‌ரும் ஆரிய‌ என்ற சொல்லுக்கும் பார்ப‌ப‌ன‌ர்க‌ளுக்கும், ஆரிய‌த்துக்கும் எந்த‌ வித‌த் தொட‌ர்பும் கிடையாது. த‌மிழ்ம‌ன்ன‌ர்க‌ள் ப‌ல‌ருக்கும் ச‌ம‌க்கிருத ப‌ட்ட‌ங்க‌ளுண்டு, அவ‌ர்கள் எல்லாம் ஆரிய‌ர்க‌ளுமல்ல‌, பார்ப்ப‌ன‌ர்க‌ளும‌ல்ல‌. தமிழில் ஆரிய‌ர் என்ற‌ சொல்லுக்கு உய‌ர்ந்த‌ (Noble) என்ற‌ க‌ருத்துமுண்டு. உதார‌ண‌மாக‌ த‌மிழ‌ரான‌ மாணிக்க‌வாச‌க‌ர் சிவ‌புராண‌த்தில் சிவ‌னைப் பார்த்து, "பாச‌மாம் ப‌ற்ற‌றுத்துப் பாரிக்கும் ஆரிய‌னே" என்ப‌து, ஆரிய‌‍ம் திராவிட‌- பிரிவைக் குறிப்ப‌த‌ல்ல‌. அதேபோல் யாழ்ப்பாண‌ அர‌ச‌ர்க‌ளுடைய‌ ப‌ட்ட‌ப்பெயராகிய‌ ஆரிய‌ச்ச‌க்க‌ர‌வர்த்திக‌ளும் அவ‌ர்க‌ள் ஆரிய‌ர்க‌ள் என்ப‌தைக் குறிப்ப‌த‌ல்ல‌. சில‌ர் அவ‌ர்க‌ளைக் க‌லிங்க‌த்துப் பார்ப்ப‌ன‌ர்க‌ளாக‌க் குறிப்பிடுகிறார்க‌ள் அத‌ற்கு ஆதார‌ம் எதுவுமில்லை. சில‌ர் பார்ப்ப‌ன‌ பெண்க‌ளையும் ம‌ண‌ந்திருக்க‌லாம் அவ்வ‌ள‌வு தான்.

    யாழ்ப்பாண‌ அர‌ச‌ பாண்டிய‌ இளவ‌ர‌ச‌னால் நிறுவ‌ப்ப‌ட்ட‌து என்ப‌தைக் யாழ்ப்பாண‌ அர‌சின் வ‌ர‌லாற்றைக் கூறும் கைலாயமாலை தெளிவாக குறிப்ப்பிடுகிற‌து. "கோலநகர்ச் செல்வமது ரைச்செழிய சேகரன்செய் மாதங்கள் மல்க வியன்மகவாய் வந்தபிரான்-கல்விநிறை தென்ன(ன்)நிக ரான செகராசன் தென்னிலங்கை மன்னவனா குஞ்சிங்கை ஆரியமால்". அதாவ‌து யாழ்ப்பாண அர‌ச‌குடும்ப‌த்தை நிறுவிய‌வ‌ன் ம‌துரைச் செழிய‌ன்- ம‌துரை அர‌ச‌னின் ம‌க‌னாக‌ வ‌ந்த‌, க‌ல்வி நிறை தென்ன‌ன்(த‌மிழ‌ன் அல்ல‌து பாண்டிய‌ன்) செக‌ராச‌சேக‌ர‌ன் -அவ‌ன் தென்னில‌ங்கை ம‌ன்ன‌வ‌னாகிய‌ சிங்கை ஆரிய‌ன்.


    "...மாதனத்தான் மாதிறத்தான் மாதுரத்தான் மால்நிறத்தான்
    ஆதரத்தான் ஆழிவைத்தான் ஆர்வனத்தான்-வேதன் அத்தான்
    போலும் எழிலுடையான் பூவுடையான் பூணுடையான்
    மேலும் வயமுடையான் வீறுடையான்-கோலநகர்ச்
    செல்வமது ரைச்செழிய சேகரன்செய் மாதங்கள்
    மல்க வியன்மகவாய் வந்தபிரான்-கல்விநிறை
    தென்ன(ன்)நிக ரான செகராசன் தென்னிலங்கை
    மன்னவனா குஞ்சிங்கை ஆரியமால்-தன்னுழையிற்
    பொன்பற்றி யூரனண்டர் போரில் அழல்சூரன்
    மின்பற்று காலின் விலங்குதன்னை-அன்புற்று
    வெட்டுவித்து விட்டபுகழ் வேளாளர் வங்கிஷத்தில்
    திட்டமுடன் வந்து செனனித்தோன்..."

    -யாழ்ப்பாண‌க் கைலாய‌மாலை -

    ReplyDelete
  35. //ஒரு கணிசமான வகாபிகளை விரட்டவே இஸ்லாம் குறித்து யாம் எழுதுகின்றோம் ஒழிய, ஒட்டு மொத்த இஸ்லாமியர்களையும் குற்றப்பரம்பரையாக்கி விட அல்ல. இதே நிலையைத் தான் பார்ப்பனர்களிலும் இதர சாதி பிரிவில் கூட உள்ளது//
    இதே நிலையைத் தான் பார்ப்பனர்களிலும் இதர சாதி பிரிவில் கூட உள்ளது. பார்ப்பனர்களிலும் இதர சாதி பிரிவிலும் அகற்ற படவேண்டிய நச்சு கருத்துக்கள் சிந்தனைகள் உண்டு. ஆனால் அந்நிய அரபு ஆக்கிரமிப்பில் தங்களை அரபிகளாக கற்பனை பண்ணி சுகம் காணும் போக்கு அபாயகரமான எண்ணம் இந்தியாவில் உள்ள எந்த சாதி பிரிவினரிலும் பார்ப்பனர் சாதி பிரிவினரிலும் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
    //எனது முஸ்லிம் தோழன் ஒரு இந்து பெண்ணை மணந்துள்ளான்//
    எனது முஸ்லிம் தோழன் ஆண். ஒரு இஸ்லாமிய ஆண் இந்து பெண்ணை மட்டுமல்ல காபிர் பெண்ணை மணப்பது என்பது அரபு ஆதிக்கத்தின் கீழ் காபிர்களை அடிமைகளாக கொண்டுவருதல் என்பதில் வருகிறது.
    ஒரு இஸ்லாமிய பெண்ணும் ஒரு இந்து ஆணும் அல்லது காபீர் ஆணும் ஒருவரை ஒருவர் விரும்ப அனுமதியுண்டா?

    ReplyDelete
  36. "ஒரு இஸ்லாமிய பெண்ணும் ஒரு இந்து ஆணும் அல்லது காபீர் ஆணும் ஒருவரை ஒருவர் விரும்ப அனுமதியுண்டா?"

    வேகநரி உங்களுக்கு ஏன் இந்த பேராசை? ஹிஹ்ஹி
    மதம் மாறினால் எல்லாம் சரியாகும்

    ReplyDelete
  37. வியாசன்
    viyaasan.blogspot
    எண்ணெய்வ‌ள‌ இஸ்லாமிய‌ நாடுக‌ளைப் போல க‌ஞ்ச‌ன்க‌ள் கிடையாது. வ‌ஹாபியிச‌த்தை வறிய‌நாடுக‌ளில் ப‌ர‌ப்ப‌ ம‌ட்டும் தான் ச‌வூதி அரேபியா ப‌ண‌த்தைச் செல‌விடும். சுனாமியால் பல‌ முஸ்லீம் நாடுக‌ள் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ போது கூடிய‌ள‌வில் நிதியுத‌விய‌ளித்த‌து மேலைத்தேய‌ கிறித்த‌வ‌ நாடுக‌ள் தான். சோமாலி முஸ்லீம்க‌ள், எதியோப்பிய‌ முஸ்லீம்க‌ளும் க‌ஞ்சிக்கு வ‌ழியில்லாம‌ல் அலையும் போது உண‌வ‌ளித்துக் காத்த‌வ‌ர‌க்ளும் கிறித்த‌வ‌ மேலைநாடுக‌ள் தான். க‌ன‌டா ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தில் ஆபிரிக்க‌ அக‌திமுகாம்க‌ளிலிருந்து அழைத்துவ‌ர‌ப்ப‌ட்டு, இல‌வ‌ச‌மாக‌ க‌ல்வி, வீடு, எல்லாம் வாழ‌ வ‌ச‌தி செய்து கொடுத்த‌பின்ன‌ர் இன்று ப‌ல்கிப்பெருகி, அமெரிக்காவையும், க‌னடாவையும் திட்டித் தீர்க்கும் ஒசாமா ஆதர‌வு எதியோப்பிய‌, சோமாலிய‌ முஸ்லீம்க‌ள் ப‌ல‌ர் இருக்கின்றார்க‌ள், ந‌ன்றி என்ப‌தை முஸ்லீம்க‌ளிட‌ம் காண்ப‌து அரிது.

    ReplyDelete
  38. நன்கு விளக்கமான கட்டுரை அண்ணா! என்ன திடீரென்று பெரியார் மீது பொங்குகிறார்களே என்று எண்ணியிருந்தேன்! இப்போதுதான் பதில் கிடைத்தது!

    ReplyDelete


வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Spam - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். சுட்டிக்களைப் பகிர்வோர் GOO.GL பயன்படுத்தி சுருக்கிப் பகிரவும்.

 
© 2011 கோடங்கி
Posts RSS Comments RSS
Back to top