கடந்த 2001-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கின் குற்றவாளியான அப்சல் குரு தூக்கிலிடப்பட்டுள்ளான். கடந்த சனவரி 23-ஆம் தேதி இவனது தூக்குத் தண்டனையை நிறைவேற்றுமாறு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்து இருந்தது. இந்நிலையில் இவனது கருணை மனுவை இந்திய அதிபர் பிரணாப் முகர்ச்சி புறந்தள்ளினார். இதனைத் தொடர்ந்து தில்லியில் உள்ள திகார் சிறையில் அப்சல் குரு நேற்று தூக்கிலிடப்பட்டுள்ளார். தண்டனை நிறைவேற்றப்பட்டதை, மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் உறுதிப்படுத்தினார். இந்த விவகாரத்தில், சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தீவிரவாதம் கொடுமையானது, அதிலும் மதத் தீவிரவாதங்கள் அதி பயங்கரமானது. ஆனால் தீவிரவாதிகளை நசுக்குகின்றேன் என்ற போர்வையில் அப்பாவிகளைப் பலியிடுகின்றனரோ என்ற சில சமயம் எண்ணச் செய்கின்றது. மேம்போக்காகப் பார்த்தால் மாபெரும் இறையாண்மை உள்ள ஒரு தேசத்துக்குப் பங்கம் விளைவித்த ஒரு பெரும் தீவிரவாதியை கொன்று களைந்துவிட்டதாக நாம் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால், உண்மையில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பதைச் சற்று ஆழமாகக் கவனித்தால் வெறுமையே மிஞ்சுகின்றது. இந்தத் தேசத்தின் ஓட்டைகளை நிரப்ப அவ்வவ்ப்போது இவ்வாறான நபர்களைத் தூக்கிலிட்டு நமது ஓட்டைகளை வெற்றுக் கரங்களால் மூடிக் கொள்கின்றோம்.
கடந்த 2001-ம் ஆண்டுத் திசம்பர் 13, காலை 11.40 அளவில் பாராளமன்ற வளாகத்தில் காரில் நுழைந்தார்கள் ஐந்து பேர். அவர்கள் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் மீது கடும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார்கள். இதில் எட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளும், ஒரு தோட்டக்காரரும் கொல்லப்பட்டனர். பாதுக்காப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு அங்கு வந்த ஐந்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து யம்மு-கசுமீரில் உள்ள சிறி நகரில் வசித்து வந்த மொகம்மது அப்சல் குரு, அவனது உறவினன் சௌகத் உசேன் குரு, சௌகத்தின் மனைவி நவ்ஜோத் சந்து மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் அரபு துறையில் பணியாற்றிய விரிவுரையாளர் SAR கிலானி ஆகியோரை கைது செய்தனர் தில்லி காவல்துறையினர்.
இத்தனை ஆண்டுகால இழுபறி வழக்குகள் நடத்தப்பட்டுப் பல மர்மங்கள் விடுவிக்கப்படாமலேயே இரவோடு இரவாகத் தூக்கிலிடப்பட்டுள்ளான் அப்சல் குரு. அவனது உடலத்தைத் குடும்பத்தாருக்குக் கூட தராமல் திகார் சிறைக்குள்ளேயே புதைத்தும் விட்டனர். சாமான்யர்களான நமக்கு ஒரு வழியாக ஒரு பயங்கரவாதி ஒழிக்கப்பட்டு விட்டான் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி மீண்டும் இந்தியா அமைதி பூங்கா, இந்தியர்கள் அமைதி விரும்பிகள் என்ற எண்ணத்தை ஊடகத்தின் ஊடாகப் பூடகமாகப் பரப்பியுள்ளார்கள்.
இந்தியாவின் பெரும் கட்சிகளான காங்கிரசு, பிஜேபி, மார்க்சிய கம்யூனிசிட் எப்போதும் இல்லாத அளவில் ஒன்றுப்பட்டு இதனை வரவேற்று சட்டத்தின் ஆட்சி நிலைப்பெற்றுவிட்டதாகப் பெருமிதமடைந்து கொண்டர்கள்.
பாகிசுதான் மற்றும் இந்தியாவின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை அடையப் போராடிய ஜம்மு காசுமிர் விடுதலை முன்னணியில் ஒரு கடைநிலை போராளியாகத் தமது வாலிப வயதில் இணைந்துக் கொண்டவன் அப்சல் குரு. மதம் சாராத ஒரு தேசியவாத விடுதலை இயக்கமாகவே இது இருந்தது என்பதைக் கசுமீரிய வரலாறை வாசிப்போர் உணர்வார்கள். இந்த இயக்கம் 1994-களில் பிளவடைந்து யாசின் மாலிக் தலைமையில் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு மிதவாத போராட்டங்களுக்குத் திரும்பியது அத்தகைய சூழலில் கசுமீரின் விடுதலை மீதும், அமைதியான வழியின் மீதும் நம்பிக்கைக் கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய இளைஞர்களின் ஒருவனே அப்சல் குரு என்பதை இங்குப் பதிவு செய்ய விரும்புகின்றேன். 1994-களில் இந்திய அரசாங்கத்தின் மறுவாழ்வு கோரிக்கைகளை ஏற்றுச் சரணடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி குடும்பம் சகிதமாக வாழ்ந்து வந்த ஒரு மனிதன். மாபெரும் பாராளமன்றத் தாக்குதல்களுக்குக் காரணமான தீவிரவாதிகளுக்கு உதவி விட்டுக் குடும்பம் சகிதமாகக் கசுமீரில் வாழ எந்தவொரு சிந்திக்கும் மனிதரும் நினைப்பானா.
இந்திய பாதுகாப்புத் துறையின் தோல்விகளையும், அரசியல் சதுரங்கங்களையும் மறைக்கக் கிடைத்த பலியாடு அப்சல் குரு. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையில் கூட அப்சல் குரு குற்றம் சாட்டப்படவில்லை. உச்ச நீதிமன்றமோ சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் அப்சல் குருவை குற்றவாளியாக்கியது. ஆனால் இன்னபிற குற்றம் சாட்டப்பட்டவர்களாஅன SAR கிலானி முதலியோர் விடுவிக்கப்பட்டார்கள்.
அப்சல் குருவை எடுத்த எடுப்பிலேயே அதி பயங்கரவாதியாகக் கூறப்பட்டுப் பாதுக்காப்பான சிறையில் அடைத்தனர், அவனது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க வழக்கறிஞரைக் கூட ஏற்பாடு செய்யவில்லை அவர்கள். நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜூனியர் வக்கீல் ஒருமுறை கூட அப்சல் குருவை சிறையில் சென்று சந்தித்திருக்கவில்லை. எதிர் தரப்பின் சாட்சியங்களை ஒருமுறை கூட அப்சலுக்காக ஏற்பாடு செய்த ஜூனியர் வக்கீல் குறுக்குக் கேள்வி கேட்கவில்லை.
காவல்துறை அப்சல் குருவை இந்த வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்க இருந்தமை அவனது செல்பேசியும், மடிக்கணனியும் தான் என்றனர். அவற்றில் இந்தியாவை அச்சுறுத்தும் அதிபயங்கர ஆதாரங்கள் எவையும் இருந்தனவா என்றால், அதுவும் இல்லை.
![]() |
| Courtesy: The Hindu |
பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் திட்டத்தின் பிரதம மூளை என்ற அடிப்படையில் மெளலானா மசூத் அசார்,காஜிபாபா மற்றும் தாரிக் அகமது என்ற 3 பாக்கிசுதானியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு குற்றக் குறிப்பாணை பதிவு செய்யப்பட்டது. அத்தகைய பிரதம மூளையாக செயல்பட்டவர்கள் பிடிக்கப் படவில்லை. கொலை நடவடிக்கையில் நிதர்சனமாக ஈடுபட்டவர்கள் இறந்து விட்டனர். இந்தக் காஜி பாபா என்ற தீவிரவாதி ஆகச்ட் 30, 2003-யில் பாதுக்காப்பு படையினரால் படுகொலை செய்யப்பட்டான் என்பது இங்கு நினைவு கொள்ளத் தக்கது.
எனவே சதிச்செயலில் ஒரு பங்கு அப்சலுக்கு உண்டு என கருதப்படினும் அவருக்கு தலைமை தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்படக் கூடாது. ஏனேனில் அவர் குறிப்பிட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்படவும் இல்லை, தாக்குதலில் ஈடுபடவும் இல்லை. அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்பதும், தீவிரவாதத்திற்கு உண்மை காரணம் என்னவென்று கண்டறியும் நடவடிக்கையும் புறந்தள்ளப்பட்டுவிடும். உண்மையான குற்றவாளிகள் நிம்மதியாகக் காணாமல் போய்விட்டார்கள், அவர்களோடு தொடர்பு பட்டு இருந்த இந்திய அதிகார வர்க்கத்தினரும் இப்போது பெருமூச்சு விடுகின்றார்கள். ஏனெனில் அப்சல் குருவின் மர்மங்கள் களையப்படாமலேயே அவனைத் தூக்கிலிட்டுள்ளார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை தூக்குத் தண்டனை என்பது அரிதினும் அரிதாகவே கொடுப்போம் என உச்ச நீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்க் கூறி இருந்தது. ஆனால் அந்த அரிது அப்பாவிகளுக்கு மட்டுந்தானா என்ற கேள்வியை இங்கு எழுப்ப விரும்புகின்றேன்.
ஏன் இதே தீவிரத்தை சீக்கிய காலிசிதான் தீவிரவாதியான தேவிந்தர் பால் சிங் புல்லாருக்கு கொடுக்கவில்லை. 1993-களில் கார் வெடிக்குண்டு நிகழ்த்தி 9 பேரையும், இளைஞர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், தீவிரவாத எதிர்ப்புக் கூட்டணியின் இயக்குநருமாக விளங்கிய மணிந்தர்ஜித் சிங்க பிட்டாவையும் படுகொலை செய்தான்.
அவ்வாறே ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய முருகன், சாந்தன், பேரறிவாளனுக்குக் கொடுக்கவில்லை.
ஒரிசாவில் மதப்பணியாற்றிய கிரகம் சிடைன், அவரது இரு இளம் மகன்களையும் தீயிலிட்டு கொன்ற தாரா சிங் ஏன் இன்னமும் தூக்கிலிடப்படவில்லை. அவன் ஏற்கனவே அருள்தாசு என்ற கிறித்தவப் பாதிரியைக் கொன்றவன் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
2008-யின் மாலேகான் குண்டுவெடிப்பு, 2007-யின் மீனா பள்ளிவாசல் குண்டு வெடிப்பு, 2007-யின் சம்ஜவ்தா எக்சுபிரசு தாக்குதல், 2007 அச்மீர் சூபி தர்க்கா குண்டு வெடிப்பில் சிக்கிய சுவாமி அசிமானந்தா என்ற சங்க பரிவாரத்தைச் சேர்ந்த இந்து தீவிரவாதிக்கு ஏன் தூக்குத் தண்டனை இன்னமும் வழங்கப்படவில்லை என்ற கேள்விகளும் நம் மத்தியில் எழுகின்றன.
இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டதை எதிர்த்து காசுமீர் மக்கள் அறுபதாண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆரம்பத்தில் இந்தப்போராட்டத்தில் மதம் இருக்கவில்லை, தேசிய இன உணர்வுதான் இருந்தது. காசுமீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்த இந்தியா, அரச பயங்கரவாதத்தின் மூலம் அந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கி வந்தது. முதலில் யம்மு காசுமீர் விடுதலை முன்னணி போன்ற மதச்சார்பற்ற இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் முன்னிலை வகித்தன. பின்னர் இந்தியா, பாக்கிசுதான் இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் காசுமீர் பிரச்சினையை வைத்து தத்தமது நாட்டு மக்களிடம் தேசிய வெறியைக் கிளறிவிட்டு ஆதாயம் அடைந்து வருகின்றன என்பது மட்டுமே உண்மை.
அதிகார வர்க்கத்தின் முன்னேற்பாடுகளில் நடைபெறும் மதம் சார்ந்த பாவ அரசியல் தெற்காசிய சமூகங்களைப் பீடித்துள்ளன. ஒவ்வொரு அதிகார வர்க்கத்தினரும் தமது அதிகார, அரசியல், பொருளாதார நலன்களுக்காக முடுக்கிவிடும் கலவர காவியங்களில் மற்றுமொரு அத்தியாயமே அப்சல் குரு. இந்து,முசுலிம் மதவாதிகளின் அரிப்பரசியலில் பலியாக்கப்பட்ட மற்றுமொரு பலியாடு அப்சல் குரு என்பதை ஒவ்வொரு இந்தியர்களின் மனசாட்சிக்கும் தெரிந்திருக்கும்.


வணக்கம் நண்பரே,
ReplyDeleteசர்ச்சைக்குறிய பதிவுதான். பாமர மக்களாகிய நாம் ஊடகங்கள் மூலமாக மட்டுமே செய்திகளை அறிகிறோம். பாராளுமன்ற தாக்குதல் வழக்கு குறித்தோ, அதன் த்கவல்களின் நம்பகத் த்னமை குறித்தோ நம்மால் சரிபார்க்க இயலாது என்பதே உண்மை.
ஆகவே நீதிமன்ற தீர்ப்பின் படி அஃப்சல் குரு குற்றவாளி என்பதை ஏற்கிறேன்.ஆனால் மரண தண்டனை தவிர்த்து இருக்கலாம் என்பதே நம் கருத்து.
இது வழக்கமான காங்கிரசின் தந்திரமே!!
இது மோடிக்கு போட்டியாக மிதமான இந்துத்வ அரசியலை முன்னெடுக்கும் தந்திரம் மட்டுமே!!
கசாப்,அஃப்சல் குரு பற்றி பாஜக குற்றம் சாட்ட முடியாது!!
**
காஷ்மீர் மக்களின் உரிமைப் போராட்டம் என்பது சில ஷுன்னி பிரிவு விடுதலை இயக்கங்கள்தான் முன் எடுக்கின்றன என்பதும்,அவை தனிநாடு என்பது பகல்கனவு என உணர்ந்து சுய நிர்ணய ஆட்சி போன்றவை கோரி, நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக,மத சார்பற்ற இயக்கங்களுடன் இணைந்து போராடினால் நலம். இஸ்லாமிய பெரும்பானமை நாடுகளின் நிலை கண்டும் ,தனி நாடு கோருவது பேதமை. கசுமீர் இருக்கும் வாய்ப்புகளில் பாகிஸ்தானை விட,இந்தியாவுடன் இணைந்து இருப்பதே நலம்!
இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளுக்குமே அதிக அதிகார பகிர்வு வேண்டும்!!
Thank you
அவை தனிநாடு என்பது பகல்கனவு என உணர்ந்து
Delete//
ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு -
ஐ.நா மன்றம்.
1947-யில் பாகிஸ்தான் காஷ்மீருக்குள் வந்தபோது, ‘அவர்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களா, தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா? வாக்கெடுப்பு நடத்துங்கள்’ என்று ஐ.நா மன்றம் இந்தியாவிடம் சொன்னது. 1949, ஜனவரி-1-யில் நடத்தவேண்டிய வாக்கெடுப்பை 60 ஆண்டுகாலமாக நடத்தவே இல்லை இந்திய அரசு.
- கொளத்தூர் மணி
//தனிநாடு என்பது பகல்கனவு என உணர்ந்து சுய நிர்ணய ஆட்சி போன்றவை கோரி, நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக,மத சார்பற்ற இயக்கங்களுடன் இணைந்து போராடினால் நலம். //
Deleteசார்வாள் , கவனம், இதே நிலைப்பாட்டை இலங்கை தமிழர் விஷயத்தில் எடுத்தீர் என்றால், விபரீதம் ஆகிவிடும்.
நான் விவாதத்தை திசை திருப்பவில்லை, சார்வாகனின் இரட்டை முகத்தை காட்டவே இந்த கருத்தை பதிந்தேன்.
சார்வாகன் ,
Deleteஉங்களின் கருத்து ஒரு பக்க சார்புடையதாக இருப்பது வருத்தமாக இருக்கின்றது.
உங்களுடைய பரினவியல் கட்டுரைகளின் ரசிகன் நான், அனால் தங்களின் மத சார்பான கட்டுரை மற்றும் கருத்துக்கள் இஸ்லாமிய மக்களுக்கு எதிர்ப்பாகவும் ஹிந்துத்வா மக்கள் சார்பாகவும் இருப்பது கண்கூடு.
நீதி மன்றங்கள் என்பவை தன்னியல்பாக குற்றங்களை கண்டுபிடித்து நீதி வழங்குகின்றனவா என்ன? இட்டுகட்டப்பட்ட எத்தனயோ வழக்குகளை நாம் கேள்விபட்டிரிக்கிறோம் .
காவல் துறை சிறப்பு புலனாய்வு துறை இன்னும் பிற துறைகளின் பரிந்துரைபடியே தண்டனை வளங்கபடுகிரதென்பதை தங்களுக்கு தெரியாதா ?
சார்வாகன் ,
Delete----தனிநாடு என்பது பகல்கனவு என உணர்ந்து சுய நிர்ணய ஆட்சி போன்றவை கோரி, நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக,மத சார்பற்ற இயக்கங்களுடன் இணைந்து போராடினால் நலம் -----------
வல்லான் வகுத்ததெல்லாம் சட்டமா என்ன?
அப்படியெனில் போராடும் உரிமை கூட இல்லையா அம்மக்களுக்கு. டீசல் , பெட்ரோல் விலை உயர்வு , கூடன்குள போராட்டம் , பாலியல் வன்முறைக் கெதிரான போராட்டம், நில கையகபடுத்தளுக்கேதிரான போராட்டம் ...இன்னும் பிற ...
உங்கள் கருத்து படி இவையெல்லாம் கொச்சையக்கபடுகின்றன .
மன்னிக்கவும் மற்றபடி உங்கள் கருதுருமையை நான் எதிர்கவில்லை ...
நன்றி ,
செல்வகுமார்
இதுவே இந்த பதிவு சாந்தனுக்காக இருந்தா இது 'நல்ல பதிவு' ஆகி இருக்கும். அப்சல் குரு ஆனதாலே இது 'சர்ச்சைக்குரிய பதிவு'.
Deleteஹீ ஹீ. நீங்களும் உங்க வெட்டி நியாயமும்.
சார்வாகன் ,
Delete-----கசுமீர் இருக்கும் வாய்ப்புகளில் பாகிஸ்தானை விட,இந்தியாவுடன் இணைந்து இருப்பதே நலம்------
ஆக ....அருமையான கருத்து.. இந்த கருத்து உங்களுக்கு மட்டுமில்லை இங்கிருக்கும் பெரும்பான்மையான (ஹிந்து) மக்களுக்கு மிருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை .
நண்பர் குருநாதன்,
Deleteதேசிய இனம் என்பதன் வரையறை என்ன?
நாம் அனைவரும் கலப்பின மக்களே.
ஒரு இனத்தின் மொழி என்பதும் மாறும்!!!
**
நண்பர் செல்வா,
உங்களின் நிலைப் பாட்டை சொல்லி,பிறகு என் கருத்தை விமர்சிக்க தாழ்மையோடு வேண்டுகிறேன்.
அஃப்சல் குரு அப்பாவியா?
கசுமீர் பிரச்சினைக்கு தீர்வு என்ன?
அவ்வளவுதான்!!
நன்றி!!!
நன்றி!!!
மதம் சார்ந்திருப்பதைக் காரணம் காட்டி, ஒரு தேசிய இனத்தின் இறையாண்மையை மறுக்க முடியாது. அவர்களுக்கு முழு உரிமையும் உள்ளது.
DeleteUN says: A people can be said to have realized its right to self-determination when they have either (1) established a sovereign and independent state; (2) freely associated with another state or (3) integrated with another state after freely having expressed their will to do so . The definition of realization of self-determination was confirmed in the Declaration of Friendly Relations .
சர்வதேச பொருளாதார சமூகப் பண்பாட்டு உரிமைகளுக்கான உடன்படிக்கை (International Covenant on Economic,Social and Cultural rights-ICESCR) ஆகியவற்றின் முதலாம் சரத்து (Article 1) இவ்வாறு கூறுகிறது.
‘எல்லா மக்களுக்கும் சுய நிர்ணய உரிமை உண்டு. அந்த உரிமையின் அடிப்படையில் அவர்கள் தங்கள் அரசியல் அந்தஸ்தை தீர்மானிக்கவும் தங்கள் பொருளாதார, சமூகப் பண்பாட்டு மேம்பாட்டை சுதந்திரமாக மேற்கொள்ளவும் உரித்து உண்டு”
எந்தவொரு நாட்டின் சட்டமும் எழுதப்பட்டுவிட்டது என்பதற்காக அவற்றில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டவோ, கேள்வி எழுப்பவோ இயலாது அல்லது வேண்டாம் என்ற வாதத்தையும் நான் எதிர்க்கின்றேன், கிட்டத்தட்ட இஸ்லாமிய ஷரியாவை நுழைப்போரின் மனோபாவமும் இதே தான். மனித சமூகத்தின் எந்தவித சட்டங்களும், காலம், தேவை, உலக இயல்புக்கு அமைய மாற்றியமைத்தலே அவசியம், அச் சட்டங்களின் குறைகளை சுட்டிக் காட்டும் போது மட்டுமே அவை மாற்றியமைக்கப்படும் ..
Deleteசகோ இக்பால்,
Deleteஏட்டுச் சுரைக்காய் கரிக்கு உதவாது!!
ஒவ்வொரு மனிதருக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. ஆனால் ஒரு நிலப்பரப்பில் வெவ்வேறு மதம்,இனம், மொழி மக்கள் வாழும் போது பெரும்பான்மை இன மக்களின் விருப்பமே சுய நிர்ணயம் ஆகுமா?
இதர மக்களின் நிலை என்ன?
பாகிஸ்தானுக்கு போராடிய அகமதியாக்களின் நிலையோ, போராட்டத்தின் த்லைமையேற்ற ஷியா முஸ்லிம் ஜின்னாவோ பாகிஸ்தானின் இப்போதைய நிலையை விரும்ப மாட்டார்கள்.
மதத்தால் பிரிந்த பாகிஸ்தான், மொழியால் இரண்டானது.இப்படிப் பிரித்துக் கொண்டே போனால் தீர்வுதான் என்ன?
சிறிய நாடுகளை விட பெரிய நாடுகள் பொருளாதாரம், பாதுகாப்பு சார்ந்து நன்றாக இருக்கின்றன.
கசுமீர் தனிநாடு ஆனால் அது ஒரு பாகிஸ்தான்,ஆஃப்கானிஸ்தான் போல மட்டுமே ஆகும் என்பதில் என்க்கு 100% நம்பிக்கை உண்டு!!
கசுமீருக்கு இதர மாநிலங்களை விட அதிக உரிமை உண்டு. இதர மாநிலத்தவர் இடம் கூட வாங்க முடியாது!!
ஜனநாயகரீதியாக தங்கள் த்லைவர்களை தேர்ந்தெடுத்து நன்றாக வாழட்டுமே!!
மதம்,இனம்,மொழி சார்ந்த சமூக பிரிவினைகளை விட வாழும் நாட்டில்
ஓவொருவருக்கும் வாழ்வாதாரம் என்னும் நிலை நோக்கி முயற்சிப்பதே அனைவருக்கும் நல்லது என்பதே நம் கருத்து!
இந்தியா என் மட்டும் சொல்லவில்லை!!
கன்டா இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு பின் ஏதேனும் ஒரு இனத்தவர் அதிகம் வாழும் பகுதிகளை தனிநாடு கேட்டால் கொடுப்பார்களா!!
அப்படிக் கொடுத்தால் உருப்படுமா?
சுயமரியாதையோடு,வாழ்வாதாரம் கொண்டு வாழும் உரிமை அனைவருக்கும் வேண்டும் பிரிவினை அல்ல!!
நன்றி!!
@ சார்வாகன் - பொருளாதார ரீதியாக பெரும் நாடுகள் பலம் வாய்ந்தவைகள் தான், ஆனால் விதிவிலக்குகள் நிறையவே உள்ளன. குறிப்பாக சிங்கப்பூர், தைவான், லக்சம்பேர்க், சுவிசர்லாந்து என்பவைகளைக் கூறலாம். ஆக ! அந்த வாதம் சரியானது அல்ல ..
Deleteஅடுத்து கசுமீரம் தனி நாடானால் இந்தியாவுக்கு பெரும் செலவுகள் குறையும், எல்லைப் பாதுக்காப்பில் தற்சமயம் நீண்டதொரு சர்வதேச எல்லைகளை கண்காணிக்க இந்தியா செலவு செய்யும் எண்ணற்ற கோடிக்கணக்கான ரூபாய்களை குறைக்க முடியும் ..
கசுமீரத்தின் தென் ஜம்மு பகுதி இந்துக்கள், சீக்கியர் பெரும்பான்மையான பிரதேசமாகும். தேசிய இனம் சார்ந்து பார்க்கின் தென் ஜம்மு பகுதியினர் தாம் இந்தியாவோடு இருப்பதா, கசுமீரோடு இணைவதா என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம். இது லடாக் தனிப் பிரதேசத்துக்கும் பொருந்தும்.
நான் பழகிய வரை பெரும்பாலான கசுமீரிகள் இந்தியாவோடோ, தனியாகவோ வாழவே விரும்புகின்றார்கள் ... ! ஆக, அவர்களின் விருப்பத்தை ஐநா சபையின் துணையோடு அறிவதே மிகவும் நல்லது ..
கசுமீரில் அயலவர் நிலம் வாங்கக் கூடாது என்ற சட்டம் நிலப்பாதுக்காப்பை உறுதி செய்துள்ள போதும், தனிநாடாக இருந்த கசுமீரம் இந்தியாவின் அரவணைப்பை பாதுக்காப்பை நாடியே இந்தியாவிடம் முறையிட்டார்களே ஒழிய, இறையாண்மையை விட்டுக் கொடுக்க அல்ல.
அடுத்து மதவாதம் பெரும் என்ற அச்சம் நியாயமானவை என்ற போதும், அதுக் குறித்து முடிவு செய்ய வேண்டியது கசுமீரிகள் தான் ஒழிய நாம் இல்லை. இஸ்லாமிய மதம் சார்ந்த நாடாக மாறுமானால் அது நிச்சயம் பின்னடைவே, ஆனால் இப்போதே அப்படித் தானே உள்ளது. இந்தியாவில் இருந்த போதும் இஸ்லாமிய மதவாதம் தலையெடுத்தே உள்ளன.
மதவாதங்களை இல்லாமல் செய்ய போராட வேண்டியதும், வேண்டாததும் கசுமீரிகளின் கையிலே உள்ளது. மாறும் உலக இயல்பில் சில காலங்களில் மதவாதம் புறக்கணிக்கப்பட்டு பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் நிலைப்பெறும் என்பது எனதுக் கருத்து. ஆகவே ! அந்த வாதமும் கொஞ்சம் தொய்வே !
நன்றிகள் ... !
இங்கு பேசிய பலரும் கசுமீரில் அமுலில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958, அது மீறிவரும் மனித உரிமைகள் குறித்து பேசவே இல்லை என்பது வருத்தமான விடயம். இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டும், கசுமீர் இந்தியாவின் அங்கம் எனக் கூறுவோர், ஏன் இந்த சட்டங்களை நீக்கவோ, பொது சிவிலியன் சட்டத்தை நாடு முழுவதும் அமுலாக்கவோ விரும்பவில்லை என்பது எனது ஐயமாக உள்ளது. இந்த சிறப்பு சட்டமே பல கசுமீரிகளை அந்நியப்படுத்தும் சூழலை அங்கு ஏற்படுத்துகின்றது. படையணியின் மனித படுகொலைகள், பலாத்காரங்களுக்கு தண்டனை இச்சட்டத்தில் இல்லை என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும்... :(
Deleteசகோ இக்பால்
Deleteநாம் வெளிப்படையாக விவாதித்து ஒரு உடன்பாடு காண முன்வருகிறோம். பல்ருக்கு குறிப்பாக மதவாத சகோக்களுக்கு இது ஒத்துவராது.
உங்கள் கருத்துக்கே வருகிறேன். ஜம்மு&கசுமீர் = கசுமீர்[15%]+ஜம்மு[20%]+லடாக்[65%] இதில் கசுமீர் பகுதியில் மட்டுமே மூமின்கள் பெரும்பான்மை. இதர பகுதிகளில் இந்து,பவுத்த சமயத்தினரே. ஆனால் மொத்த மக்கள் தொகையில்( 12 மில்லியன்) மூமின்கள் பெரும்பானமை என்பதால் ,தனித்தனியாக வாக்கெடுப்பு நடக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
கசுமீர் வேளி பகுதி[ 16% இடம்] மட்டும் கோரி நடக்கும் போராட்டம் எனில் அங்கு 97% மூஉமின்கள் என்பதால் சரி விட்டுவிடுவோம்.
ஆனால் ஜம்மு,லடாக்கையுன் சேர்த்தே கேட்கின்றனர்.
**
Area (Sq. Miles) *
Population (2001 Census)
1.Kashmir Valley Area=8,639 [16%]
Poppulation=5,476,970
2.Jammu Region
Area=12,378[23%]
Pop=4,430,191
3.Ladakh Region
Area =33,554 [61%]
Pop =236,539
4.Total
Area 54,571
Population=10,143,700
http://mha.nic.in/uniquepage.asp?id_pk=306
//இங்கு பேசிய பலரும் கசுமீரில் அமுலில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958, அது மீறிவரும் மனித உரிமைகள் குறித்து பேசவே இல்லை என்பது வருத்தமான விடயம்.//
My solution!!
காஷ்மீர் தலைவர்கள் இந்தியாவின் பல் பகுதிகளுக்கும் சென்று தங்களின் கொள்கையை,தீர்வை முன் வைத்து ஆதரவு திரட்டி போராட்டம் முன்னெடுப்பதை விட்டு, பாகிஸ்தான், அரபு நாடுகள் தங்களுக்கு ஒரு தீர்வு தரும் என நம்புவது முட்டாள் தனமே!!
நன்றி!!!
நிச்சயமாக ஒரு சில இடங்களில் உடன்படுகின்றேன், கஸ்மீரம் இறையாண்மையுள்ள தனிநாடாகவே இருந்துள்ளது. ஆகவே இந்தியா, சீனா, பாகிஸ்தான் கைப்பற்றிய இடங்கள் அனைத்தும் கஸ்மீர ஒட்டு மொத்த மக்களுக்கும் உரித்தானது. அவர்களுக்குள் இருக்கும் சமூக பிரிவினைகள் சார்ந்த புவியலை பிரித்துக் கொள்வதற்கும், இணைந்து வாழ்வதற்குமான வெளியையும், வாய்ப்பையும் கஸ்மீரம், ஜம்மும், லடாக் ஆகிய மக்களுக்கு தனித்தனியே அளிக்க வேண்டும் ..
Deleteயதார்த்தம் சார்ந்து பார்க்கும் போது, இன்னம் சில ஆண்டுகளுக்கு சீனா, பாகிஸ்தான், இந்தியாவால் பிளவடைந்துள்ள கஸ்மீரம் அவ்வண்ணமே நீடிக்கும், காலப் போக்கில் இந்த மூன்று பகுதிகளும் தத்தமது நாடுகள் சார்ந்த எண்ண அடிப்படையில் பிளவடைந்தும் அந்தந்த நாடுகளோடு இணைந்துவிடும் என்றே நானும் கருதுகின்றேன்.
நியாயப்படி நோக்கினால் கஸ்மீரிகளுக்கு தம் சுயநிர்ணய உரிமை உள்ளது, ஒரு தேசம் இரு பகுதி என்ற அடிப்படையில் இந்திய கஸ்மீருக்கு பூரண சுயாட்சி கிடைத்தால், இன்றைய நிலையில் கசுமீரிகள் ஏற்பார்கள் என நினைக்கின்றேன்..
அதே போல இஸ்லாமியவாதிகளோடு இணைந்து கொண்டு தனிநாடு, உரிமைகள் பெற போராடுவது என்பது கண்ணைக் கட்டி கிணற்றில் விழுவதற்கு சமம், இன்றைய உலக இயல்பின் படி மத தீவிரவாதங்கள், குறிப்பாக இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடே உள்ளன, காலப் போக்கில் இவர்கள் முற்றாக அழிக்கப்பட்டு, பழமைவாத மதங்கள் மாற்றியமைக்கப்பட்டு விடும்.
சீர்திருத்த இஸ்லாமும் உருவாகி மேற்கத்திய வாழ்வு முறைகளோடு கலந்துவிடும் என்பது எனது கணிப்பு.
மத்தியக் கிழக்கு, தெற்காசியா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மதவாதம் மக்களாலேயே நிராகரிக்கப்பட்டுவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை.
@ சார்வாகன்
Deleteஅவர்கள் இந்தியாவுடன் இருக்க வேண்டுமா?
தனி நாடாக இருக்க வேண்டுமா? என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
காஷ்மீர் மக்களின் விருப்பம்தான் முக்கியம்.
நாம் பார்வையாளராக இங்கு உட்கார்ந்து பேச மட்டுமே முடியும்.
தங்களின் வாதம் காஷ்மீரில் இந்தியா நடத்திய மனித உரிமை மீறல்களை மறைக்கிறது.
ஏற்கனவே காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த ஐநா இந்தியாவுக்கு ஆணையுட்டுள்ளது என்று அறிகிறேன்.
சகோ சார்வாகன் ,
Delete----உங்களின் நிலைப் பாட்டை சொல்லி,பிறகு என் கருத்தை விமர்சிக்க தாழ்மையோடு வேண்டுகிறேன்.-----
அப்சல் குரு குற்றமட்டவரா இல்லையா என்பது கடந்து அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்பதே எதார்த்தம் .
அதனால் அதைப் பற்றி நான் பேசவில்லை.
-----------
காஷ்மீர் மக்களின் உரிமைப் போராட்டம் என்பது சில ஷுன்னி பிரிவு விடுதலை இயக்கங்கள்தான் முன் எடுக்கின்றன என்பதும்,அவை தனிநாடு என்பது பகல்கனவு என உணர்ந்து சுய நிர்ணய ஆட்சி போன்றவை கோரி, நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக,மத சார்பற்ற இயக்கங்களுடன் இணைந்து போராடினால் நலம்.
-------
காசுமீரில் ஏற்கனவே சுய நிர்ணய ஆட்சி அல்லது அதற்க்கொப்பீடான ஆட்சி முறை இந்திய இறையாண்மைக்குட்பட்டு நடந்து வருகின்றது தானே
ஏற்கனவே ஐநா அறிவித்தபடி ஓட்டெடுப்பு நடத்தவில்லையே... கசுமிரின் பெரும்பான்மையான பகுதியில் ராணுவம் நடத்தும் அத்துமீறல்கள் கொடுமைகள் பற்றி இங்கே யாருக்கு என்ன தெரியும் . நமது பத்திரிக்கைகள் தொலைக்காட்சிகள் என்ன சொல்கின்றனவோ அது தானே இங்கு பெரும்பாண்மையான மக்களுக்கு தெரியும்.
அவர்கள் தேச பக்தி என்ற போர்வையில் காசுமீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தானே கருதுவார்கள் எனில் யார் போராடுவது..
எதார்த்தம் என்னவெனில் அவர்கள் மட்டுமே போராடும் சூழ்நிலயில் உள்ளார்கள் .
--------
இஸ்லாமிய பெரும்பானமை நாடுகளின் நிலை கண்டும் ,தனி நாடு கோருவது பேதமை. கசுமீர் இருக்கும் வாய்ப்புகளில் பாகிஸ்தானை விட,இந்தியாவுடன் இணைந்து இருப்பதே நலம்!
-----------
ஏற்கனவே இனைந்து தானே இருக்கின்றது
-------
இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளுக்குமே அதிக அதிகார பகிர்வு வேண்டும்!!
--------
ஏற்கனவே மைய அரசு இருக்கின்ற ஒவ்வொரு அதிகாரத்தயும் புடிங்கிட்டு இருக்கு...
இதுல வேற அதிகார பகிர்வு எங்க கிடைக்க போகுது
நன்றி!
சகோ சார்வாகன் ,
Delete----
தேசிய இனம் என்பதன் வரையறை என்ன?
------
The most accurate definition of a "nation", comes from Joseph Stalin. In his Marxism and the National Question, New York, 1942. He said:
"A nation is a historically evolved, stable community of language, territory, economic life, and psychological make-up manifested in a community of a culture....."
-----
நாம் அனைவரும் கலப்பின மக்களே.
-----
சகோ , நாம் அனைவரும் ஒரு தாய் மக்களே ...அப்படியிருக்க கலப்பினம் என்று நாம் ஏன் கூறிக்கொள்ள வேண்டும் .
அப்படி கலப்பினமனால் என்ன ?
தமிழர்கள் ஒரு தேசிய இனம் இல்லையா ? கலப்பில்லாமல் இன்னும் ஆதி தமிழர்களாகவே இன்னும் இருக்கின்றார்களா ?
அப்படி இல்லைஎன்றாலும் கூட நாம் தமிழர் என்ற தேசிய உணரவற்று பொய் விட்டோமா என்ன ..
தமிழர் என்பது தேசியமா இல்லை இந்தியர் என்பது தேசியமா ?
--------
ஒரு இனத்தின் மொழி என்பதும் மாறும்!!!
-------
கண்டிப்பாக மாறும் ......
இனக்கலப்பும் மொழிக்கலப்பும் இல்லாமல் மக்கள் நாகரீகம் அடைய முடியாது ...
நன்றி !!!
சகோ குருநாதன்,
Deleteஉங்களின் இஸ்லாமிய மனித நேயம்,நியாய உணர்வு என்க்கு இல்லை. ஒரு நிலப்பரப்பில் வாழும் அனைத்து மனிதர்களும் ஜன்நாயக,மதசார்பற்ற சட்டங்கள் மூலம் நிர்வாகம் செய்யப் பட வேண்டும் என்பதே நம் கொள்கை.
முஸ்லிம் பெரும்பான்மை நாட்டில் இப்படி நடக்காது!!
ஒரு காஃபிர் நாட்டில் மூமினுக்கு ஆதர்வாக பேச ஆட்கள் உண்டு.
மூமின் நாட்டில் காஃபிர்கள் கதி அதோகதிதான்!!
முஸ்லிம் பெரும்பானமை மாநிலம் இந்தியாவுடன் இருக்க விரும்பாவிட்டால், வாக்கெடுப்பு நடத்தில் பிரிந்து போக வேண்டும் என்ற உங்களின் கருத்து எனக்கு வியப்பு அளிக்கவில்லை!!!
பாகிஸ்தான், வங்கதேசம் சென்ற முஸ்லிம் அல்லாதவர்களின் நிலை அறிந்தும் இப்படிப் பேச முடிவது அருமை!!.
இந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லி விட்டால் பிரச்சினை முடிந்தது!!
ஜம்மு& கசுமீரில் சுன்னி முஸ்லிம் அல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
நன்றி!!!
சகோ செல்வா,
Deleteநாம் கலப்பு இனத்தவரே என் அறிந்தால் மட்டுமே சாதி,இன மேட்டிமை போகும்.
நல்ல வேளையாக தமிழ்நாடு தனியாகவில்லை. சாதிரீதியாக போர்கள் நிகழ்ந்து இருக்கும் என்பதே உண்மை.
சிறிய நாடுகளில் பிரிவினை சார்ந்து வன்முறை வெடிக்கும் சாத்தியம் மிக மிக அதிகம்.
ஒரு நாட்டில் பல் இனம்,மதம்,மொழி பேசும் மக்கள் ஜனநாயக,மதசார்பற்ற சட்டங்கள் அடிப்படையில் வாழ்வது பற்றி நான் கூறுகிறேன்.
நீங்கள் ஒரு மதப் பிரிவு மக்கள் அரதப் பழசு சட்ட அடிப்படையில் , பழமைவாத நாடாக நீங்கள் சொகிறீர்கள்!!
கசுமீர் மக்களின் விருப்பம் என்பது சுன்னி முஸ்லிம் பெரும்பான்மை மட்டும் அல்ல. இதர மக்களின் வாழ்வும்தான்!!
ஒரு சுன்னி பெரும்பானமை மத அடிப்படை நாட்டில் என்ன நடக்கும் எந்த் தெரியாதா?
மதம் சோறு போடாது!!.
நன்றி!!!
நல்ல சிந்தனைக்கு உள்ள பதிவு...இதை நம்ம இந்துத்வா ஒத்துக்கொள்ளாது.
ReplyDeleteஅப்சல் குரு இதற்க்கு மூளையா? அதை சரி வர நிரூபிக்க மாட்டார்கள். நம் நாட்டில் ஒருவனை தண்டிப்பது--ஓட்டுக்காக மட்டுமே...எல்லாமே அரசியல்...இதுல இந்தியா ஜனநாயாக நாடாம்.
வணக்கம் நண்பர்களே,
Deleteஇப்பதிவு அஃப்சல் குரு தூக்கு பற்றியது. நான் நமது நாட்டு சட்ட நடைமுறைகளை மதிக்கிறேன் என்னும் அடிப்படையில் அஃப்சல் குரு குற்றவாளி என ஏற்கிறேன். மரண தண்டனை நம் நாட்டு சட்டத்தில் நீக்கப்பட வேண்டும் என்பது நம் கோரிக்கை!!.
அஃப்சல் குருவின் தூக்கு , தேர்தல் சார்ந்து பாஜகவை சமாளிக்க வேகமாக செய்யப்பட்ட விடயம் எனவே கூறுகிறேன்.
**
கசுமீர் பற்றிய எனது நிலைப்பாடு!!
நாம் எதார்த்தவாதி மட்டுமே!!நடுநிலைவியாதி அல்ல!!
ஏன் கசுமீர் மக்கள் தனிநாடு ஆக வேண்டும்? அங்குள்ள சுன்னி முஸ்லிம் பிரிவு பெரும்பான்மையோர்(ஒரு பேச்சுக்கு!!) விரும்புகிறார்.ஒரு மத அடிப்படைவாத நாடு ஆகும் வாய்ப்பே அதிகம்.
தனிநாடு ஆனால், இதர பிரிவு முஸ்லிம்கள்,இந்துக்கள் விரட்டப்படுவார் ,இல்லை ஒடுக்கப்படுவார்!! . பாகிஸ்தான், வங்க தேச நிலை சார்ந்தே கணிக்கிறேன்.
இந்தியா என்பது பல இன,மொழி,மத மக்கள் வாழும் ஜனநாயக,மத சார்பற்ற நாடு. மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் கொண்டதாக,[அமெரிக்க,கனடா மாநிலங்கள் போல்] மாற வேண்டும். ஒரு மாநிலத்தில் இயற்கை வளங்களில் 75% அம்மாநிலமே பயன்படுத்த வேண்டும்.மக்களின் பிரச்சினைகள் , மாவட்ட அள்விலேயே தீர்க்கும் படியான அதிகாரப் பரவல்,பகிர்வு வேண்டும்.
கசுமீருக்கும்,வடகிழக்கு மாநிலங்களுக்கும்,ஈழத்திற்கும் இதுவே நல்ல தீர்வு!!.
டிஸ்கி:
நம்ம மூமின் சகோக்கள் போடும் வேடம் சிரிப்பு வருகிறது. கசுமீர் முஸ்லிம்கள் அதிகம் என்பதால் தனி நாடு என மனதில் எண்ணினாலும், வெளியே சொன்னால் தேசபக்தி முகமூடி வேடம் வெளிப்படும் என்பதால் அய்யோ பாவம்!!
நன்றி!!
பாதுக்காப்பு, பொருளாதாரம், பெரும்பான்மை மக்களின் விருப்பம் சார்ந்து ஒரு தேசிய இனத்தை ஒரு நாட்டோடு சேர்ந்தே வாழுங்கள் என அறிவுரைப்பது பன்னாட்டு சுயநிர்ணய உரிமை முறைக்கு முரணானது ... ஆகவே மக்களின் விருப்பு அமைய தேசிய இனங்கள் தமது விடுதலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், இது கசுமீருக்கு மட்டுமில்லை, சீனாவின் திபெத், பாகிசுதானின் பலுசிசுதான், இலங்கையின் தமிழீழம் என எவருக்குமே பொருந்தும் ... நன்றிகள் !
Deleteமுதலில் நடுநிலையோடு இங்கு கருத்து தெரிவித்திருக்கும் சகோ சார்வாகனுக்கு ஒரு வந்தனமுலு!
ReplyDeleteசரியான டுபாக்கூரான அருந்ததி ராயையெல்லாம் மேற்கோள் காட்டி இந்த கட்டுரை எழுதப்பட்டிருப்பதே வருந்ததக்கது. அருந்ததி ராயின் புரட்டுக்களை இந்துவில் பிரவின் சாமி கிழித்துவிட்டிருக்கிறார்.
http://tinyurl.com/ajj79gb
இவரு அப்பாவிங்கறது நல்ல நகைச்சுவை!
//காவல்துறை அப்சல் குருவை இந்த வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்க இருந்தமை அவனது செல்பேசியும், மடிக்கணனியும் தான் என்றனர். அவற்றில் இந்தியாவை அச்சுறுத்தும் அதிபயங்கர ஆதாரங்கள் எவையும் இருந்தனவா என்றால், அதுவும் இல்லை. //
உண்மைதான் ஆனால் சகோ எழுத மறந்த விடயம் அந்த கணனி பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்டதாக போலிஸ் நிருபித்து உள்ளது. இது குறித்து சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பிலும் குறிப்பிட்டுள்ளது.
"We hold that the laptop found in custody of Afzal and the results of analysis thereof would amply demonstrate that the laptop was the one used by the deceased terrorists contemporaneous to the date of incident (December 13, 2001) and it should have passed hands on the day of the incident or the previous day," the court had said. http://tinyurl.com/a6x72cm
ஆக இவர் தீவிரவாதிகளுக்கு உடந்தை என்பதுதான் இவரது குற்றம். நாட்டின் எதிரிகளுக்கு உதவினால் மரணமே தண்டனை இதுதான் சட்டம்.
சதி செய்து தீவிரவாதத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் உயிரிழப்பிற்கு காரணமான எவரும் அவர் எந்த மதத்தவராயினும் இந்துவோ முசுலிமே அல்லது அவர் சுதந்திர தியாகி ஆகினும் போட்டுத்தள்ளப்பட வேண்டியவரே. இனிமேலாவது மேற்கத்திய அரசுகளைப் போல தானும் ஒரு tough-state என இந்திய அரசு நிரூபித்து தனது குடிமக்களை காக்கவேண்டும். இங்கு இந்திய அரசின் செய்தி இதுதான்... தீவிரவாதிக்கு உடந்தையாக இருந்தாலே நாங்கள் போட்டு தள்ளிவிடுவோம்! இதைத்தான் அமெரிக்காவும் செய்கிறது. பெரியண்ணன் பண்ணினால் சரி, இந்தியா போன்ற நாடுகள் என்ன அடிவாங்கினாலும் மூடிகிட்டு இருக்கணும் என அமெரிக்க விசுவாசிகள் விரும்பக்கூடும்.ஆனால் முசுலிம்கள் உட்பட இந்திய மக்கள் இதை விரும்புவதாக தெரியவில்லை!
http://tinyurl.com/bg5tv2t
எனவே சதிச்செயலில் ஒரு பங்கு அப்சலுக்கு உண்டு என கருதப்படினும் அவருக்கு தலைமை தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்படக் கூடாது. ஏனேனில் அவர் குறிப்பிட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்படவும் இல்லை, தாக்குதலில் ஈடுபடவும் இல்லை. அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்பதும், தீவிரவாதத்திற்கு உண்மை காரணம் என்னவென்று கண்டறியும் நடவடிக்கையும் புறந்தள்ளப்பட்டுவிடும். உண்மையான குற்றவாளிகள் நிம்மதியாகக் காணாமல் போய்விட்டார்கள், அவர்களோடு தொடர்பு பட்டு இருந்த இந்திய அதிகார வர்க்கத்தினரும் இப்போது பெருமூச்சு விடுகின்றார்கள். ஏனெனில் அப்சல் குருவின் மர்மங்கள் களையப்படாமலேயே அவனைத் தூக்கிலிட்டுள்ளார்கள்.
Deleteமரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்பது விவாதத்திற்குறிய செய்தி. ஜனாதிபதி பரிசீனிலையில் இருக்கும் மன்னிப்பு கோரிக்கை மனுக்கள் சீனியாரிட்டி படி பரிசீலிக்க படவேண்டும். முடிவும் சீனியாரிட்டி படி எடுக்க வேண்டும். அது மட்டுமன்றி அவருடைய முடிவை 1 - 2 மாதத்துக்குள் எடுக்கவேண்டும். பல வருடங்களாக பரிசீனிலையில் இருக்கும் கைதிகள் ஒவ்வொரு நாளும் மரண பயத்திலேயே பல ஆண்டுகள் இருப்பார்கள்.
ReplyDeleteஎப்போதுமே முதலாவதாக இடம்பெற்று இருக்கும் சார்வாகன் கமெண்ட்டைத்தான் தேடிச்சென்று பார்த்தேன்.
ReplyDelete'நல்ல பதிவு' என்று அவரின் கமெண்ட் ஆரம்பிக்காததால்.....
நல்ல பதிவாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்பி படிக்க ஆரம்பித்தேன்.
நீங்களா எழுதியது..? அட..!
நன்றி திரு.இக்பால் செல்வன்.
மிகவும் அருமையான இடுகை.
Congrats. Hats off..!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய முருகன், சாந்தன், பேரறிவாளனுக்குக் கொடுக்கவில்லை.
ReplyDelete//ராஜீவ் கொலை விசாரணையில் உள்ள பல ஓட்டைகளை இந்திய ஏகாதிபத்தியம் ஏன் மூடி மறைக்கிறது??
ஆயுள் தண்டனை அனுபவித்து முடித்த பின்னரும் சகோதரி நளினியை ஏன் விடுதலை செய்யவில்லை?
இந்திய ஏகாதிபத்தியம் முக்கிய குற்றவாளிகளை கொன்றோ (தப்பிக்கவோ) விட்டுவிட்டு அப்பாவிகளை உள்ளே தள்ளி உண்மைகளை மறைத்துவிடும் என்பதே இந்த வழக்குகள் நமக்களிக்கும் சேதி போலும்.
Deleteநளினி தூக்கு அளிக்கப்பட்டு பின் கருணை அடிப்படையில் தூக்கு ரத்து செய்யட்டத்தால் வாழ்நாள் முழுக்க சிறையில் கழிக்க வேண்டும் என்பது சட்டம்.
Deleteஅருமையான பதிவு இது கண்டிக்க பட வேண்டிய கொலைதான் .
ReplyDeleteஅரசு காட்டும் அவசரம் சந்தேகம் ஊட்டுவதாக உள்ளது ..
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தாலும் நீதியற்ற நிலை எந்த மதத்தினருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே நம் நிலை.
ReplyDeleteகுற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தாலும் நீதியற்ற நிலை எந்த மதத்தினருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே நம் நிலை.
ReplyDeleteமற்ற தூக்கு தண்டனை கைதிகளை எல்லாம் விட்டுவிட்டு கசாப்பிற்கும் அப்சல் குருவிற்கும் தண்டனை நிறைவேற்றியிருப்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது. அப்சல் குருவின் பேட்டியை படிக்க: http://goo.gl/4ucG0
ReplyDeleteபயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரில்..பட்டவர்த்தமாக ஆதாரங்களைக் காட்டிக் கொண்டு செயல்படுவோர் மிகக் குறைவே !
ReplyDeleteஅவர்கள் என்ன, குதுரை தெருக்களில், குட்டி யானையில் வந்து வசனம் பேசி வன்முறை செய்பவரா?
ஏதோ..இந்த செல்போன்,இன்டெர்னெட் வந்ததால்..ஓரளவு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஏதுவாகி உள்ளது..!
@ரமேஷ் வெங்கடபதி
Deleteஆதாரங்கள் தேவையில்லை எனில், புலனாய்வு, விசாரணை அமைப்புகள் எதற்கு? கலைத்துவிட சொல்லுகிறீர்களா? சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, வாழ்விழந்து, பின் விசாரணையில் உண்மை தெரிந்து விடுதலை செய்யப்பட்டதெல்லாம் வீணா?
விஷ கருத்துக்கள்.
பாஸ் ,
Delete-------பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரில்..பட்டவர்த்தமாக ஆதாரங்களைக் காட்டிக் கொண்டு செயல்படுவோர் மிகக் குறைவே !------
ஆகவே அவர்களை போட்டுத் தள்ளுவதை தவிர வேறு வழியில்லை....:):)
அவர்கள் யார் ? இந்நாட்டின் மனசாட்ச்சி யாருக்கேதிறாய் இருக்கின்றதோ அவர்கள் .....
தேர்தலில் மத வாக்குகளை பெறுவதற்காக விஸ்வரூபம் பட விடயத்தில் தமிழக அரசு நடந்தது போலல்லாம மத்திய அரசு மத பயங்கரவாதிகளுக்கு எதிராக இப்போது போல் உறுதியுடன் நடந்த கொள்ள வேண்டும். அருந்ததி ராய் ஒரு கேள்வி எழுப்பினார் நாடாளுமன்றம் தாக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பே அரசும் போலீசும் நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று கூறிவந்துள்ளது அப்படியிருக்கும்போது வெடிபொருட்கள் நிரம்பிய கார்குண்டு எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது அவரின் தேசத்தின் மீதான அக்கறையை நினைத்து புல்லரித்து போனேன்.
ReplyDelete// 1994-களில் இந்திய அரசாங்கத்தின் மறுவாழ்வு கோரிக்கைகளை ஏற்றுச் சரணடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி குடும்பம் சகிதமாக வாழ்ந்து வந்த ஒரு மனிதன். மாபெரும் பாராளமன்றத் தாக்குதல்களுக்குக் காரணமான தீவிரவாதிகளுக்கு உதவி விட்டுக் குடும்பம் சகிதமாகக் கசுமீரில் வாழ எந்தவொரு சிந்திக்கும் மனிதரும் நினைப்பானா.//
உங்கள் கேள்வி ஒரு இனத்தை சேர்ந்த வேறு மதங்களை சேர்ந்தவர்கள் சராசரியன மனிதர்களுக்கு பொருந்தும் சகோ. ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மட்டும் இதற்கு விதி விலக்கானவர்கள் அவர்களுக்கு மிக சிறுவயது முதலே கடுமையான மதரீதியான பிறயன் வாஷ் மாறுவது மிக கடினம்.
சகோ சார்வாகன், சகோ நந்தவனத்தான் நல்ல கருத்துக்கள்.
//தனி நாடு கோருவது பேதமை. கசுமீர் இருக்கும் வாய்ப்புகளில் பாகிஸ்தானை விட,இந்தியாவுடன் இணைந்து இருப்பதே நலம்//
மிக சரியாக சொன்னீர்கள்.காஷ்மீர் என்று ஒரு இன்னொரு இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது தான் மத வெறியர்களின் கனவு உலகத்திற்கே தீமை தரகூடிய இதை யாரும் ஆதரிக்க கூடாது.
// அருந்ததி ராய் ஒரு கேள்வி எழுப்பினார் நாடாளுமன்றம் தாக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பே அரசும் போலீசும் நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று கூறிவந்துள்ளது அப்படியிருக்கும்போது வெடிபொருட்கள் நிரம்பிய கார்குண்டு எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது அவரின் தேசத்தின் மீதான அக்கறையை நினைத்து புல்லரித்து போனேன்.//
ReplyDeleteஅப்படியெனில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று சந்தேகப்படும் இடத்திற்கு பாதுகாப்பை அதிகப்படுத்தி இருக்க வேண்டாமோ? அதுவும் நாடாளுமன்றம் போன்ற அதி முக்கியம் வாய்ந்த இடங்களுக்கு கூட போதிய பாதுகாப்பு தர இயலவில்லையா? பாதுகாப்பு தரப்பட்டிருந்தால் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வெடிபொருட்கள் நிரம்பிய கார்குண்டு எப்படி நுழைய முடிந்தது?
சிந்திப்போருக்கு உண்மை புரியும். உங்கள் புரிந்துகொள்ளும் அறிவை நினைத்து புல்லரித்து போனேன்.
காக்கி டவுசர் பட்டறையில் சிறுவயது முதலே கடுமையான பிறயன் வாஷ் செய்யப்பட்டு உள்ளீர்கள். நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?
கஸாபின் மரணதண்டனையை திருட்டுத்தனமாக்கியதற்கு கூட சில சமரசங்களை அரசு சொல்லக்கூடும்.ஆனால் அப்சல் குருவின் மரண தண்டனை இந்திய ஜனநாயகத்தின் கோழைத்தனம்.தனிச்சிறை ஆயுள்தண்டனையை விட என்ன அதிக பட்ச தண்டனை இருக்க முடியும் சமூக விலங்காக திரியும் மனிதனுக்கு.
ReplyDeleteமரணதண்டனையும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொலை செய்தலுக்கு சமம்.காரணங்கள் எதுவாகிலும்.
This comment has been removed by the author.
Deleteசகா! சார்வாள் மதவாதங்களை பெண்டெடுக்கும் வித்வான்.இலங்கை விசயத்திற்கு என்னைப் போன்ற சிலரை கேள்வி கேட்டால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.
ReplyDeleteமுதலாவதாக காஷ்மீரிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களை விட சுய அதிகாரங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இரண்டாவதாக காஷ்மீரிகளின் வாக்கெடுப்பு நியாயத்துக்கும் பின்னால் இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் சூழ்ச்சி வலைகள் உள்ளன.
இலங்கை விசயத்தில் ஆயுதப் போரின் கால கட்டத்தில் இலங்கையின் கவலைகள் நியாயமாக இருந்திருக்க கூடும்.ஆனால் போர் முடிந்தும் ராஜபக்சே அரசு செல்லும் பாதை சொல்லித் தெரிய வேண்டாம்.ராஜபக்சேவும் ஏதாவது ஒரு வங்குக்குள் மாட்டுவாரென எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.இதே எதிர்பார்ப்பை முன்பு முஷ்ரஃப் காலத்திலும் எதிர்பார்த்தேன். வாழ்வென்ன நித்ய வரமா?
பிரபாகன் கொல்லப்பட்டபோது
ReplyDeleteஎன் தழினமே தோற்றது போல
உணர்ந்தேன்
அப்சல்குரு கொல்லப்பட்டபோது
என் சமுதாயம் பாதுகப்பற்று இருப்பதாக
உணர்ந்தேன்
உணர்கிறேன்
அதே போல் ஆப்கானில் தலிபான்களின் காட்டுமிராண்டி தனங்களை காட்டி படம் எடுத்தா தங்களை காட்டியது போல் துடிப்பாங்க இப்படியே எதை எதையோ உணருபவர்களுக்காக நடக்க முற்பட்டால் இந்தியா பாகிஸ்தானாக மாறும்.
Deleteஇக்பால்,
ReplyDeleteஇதே போல இன்னும் இரண்டு பதிவு போடுங்க. இந்துத்துவ நடு நிலை வாதிகளின்(?)
கிழிஞ்ச முகமூடி அந்து விழுறத பார்க்கலாம்.
இதுவே இந்த பதிவு சாந்தனுக்காக இருந்தா இது 'நல்ல பதிவு' ஆகி இருக்கும். அப்சல் குரு ஆனதாலே இது 'சர்ச்சைக்குரிய பதிவு'.ஹீ ஹீ.
Deletehttp://www.youtube.com/watch?v=wZY_oRK5VN8 … …மரணதண்டனை என்பது தேவையில்லாதது என்று படுகிறது. யாருக்குமே. கடும் தனிமைசிறை தண்டனை மட்டுமே சரி. அப்சல் குரு கைது செய்யப்பட்டதும் மீடியாவுக்கு கொடுத்த பேட்டியில் தான் உதவியதை ஒத்துக் கொள்கிறான். ஆனால் ஏன் மீடியாவுக்கு...இதை மாஜிஸ்ரேட்டிடம் சொல்லி பதிவு செய்திருக்கலாமே போலீஸ் ...ஏன் செய்யவில்லை. ஆக அவனை ஏமாற்றி இப்படி சொல்ல செய்திருக்கிறார்கள் என்கிறது அருந்ததிராய் தரப்பு. இதில் அவன் பாகிஸ்தானின் கை உள்ளதாக சொல்கிறான்...மற்றபடி ஆதாரமே இல்லை என்று இவர்கள் சொல்வது சரியா என்றே தெரியவில்லை.
ReplyDeletehttp://www.indiatvnews.com/news/india/sunni-ulema-body-welcomed-afzal-guru-s-hanging-20163.html இதில் சுன்னி பிரிவின் இந்திய தலைவர் வகாபிக்களை திட்டுகிறாரே...அப்ப வகாபிக்கள் வேறு சுன்னிபிரிவு வேறா? புரியவில்லை..எனக்கு
ReplyDeleteசகோ குளிர்ந்த பீர்[நல்ல பேரு]
Deleteநீங்கள் இந்த விளையாட்டுக்கு புதிது என்பதும் மார்க்கம் உங்களை ஈர்ப்பதும் அறிய முடிகிறது. உங்களுக்கு ஒரு எளிய விள்க்கம்.
இஸ்லாமில் பொதுவாக ரு பிரிவுகள்
1. சுன்னி இஸ்லாம் 2. ஷியா இஸ்லாம்.
இதில் ஷியா இஸ்லாமியர் ,முக்மது(சல்) அவர்களின் மருமகன் அலி(ரலி) அவர்களை முக்மதுவின்(சல்) வாரிசாக ஏற்கின்றனர். முக்மது(சல்) க்கு பிந்தைய அபுபக்கர்(ரலி), உமர்(ரலி),உத்மான்(ரலி) ஆகியோரை கலீஃபாக்கள் ஆக ஏற்பது இல்லை.
சுன்னி பிரிவில் பல வகை உண்டு. இதில் அப்துல் வஹாப் என்ற 18ஆம் நூற்றாண்டு சவுதியால் சீர்திருத்தப்பட்ட சரியான இஸ்லாம் என வஹாபியம் த்ன்னை வரையறுக்கிறது. ஹனபாலி வகை கடும்போக்கு ஷரியாவை பின்பற்றுகின்றார்.
தர்கா வழிபாடு, சூஃபிய ஆன்மீக தேடல் போன்றவற்றை நிராகரித்து ஷரியா மீதான உலகளாவிய கிலாஃபா( இசுலாமிய பேரரசு) அமைப்பதே இலட்சியம் என சவுதியில் இருந்து சாம,தான்,பேத,தண்ட வழியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
நம் தமிழ்மண தாவா சகோக்கள் பெரும்பான்மையோர் வஹாபிகளே!!
விக்கி படியுங்கள். சந்தேகங்களைக் கேளுங்கள்!!
http://en.wikipedia.org/wiki/Wahhabi
Wahhabism (Arabic: وهابية, Wahhābiyyah) is an ultra-conservative [1] branch of Sunni Islam.[2][3] It is a religious movement among fundamentalist Islamic believers, with an aspiration to return to the earliest fundamental Islamic sources of the Quran and Hadith, with inspiration from the teachings of Medieval theologian Ibn Taymiyyah and early jurist Ahmad ibn Hanbal.
ஏக இறைவன் மிகப் பெரியவன்!!!
நன்றி
வேகநரி,
ReplyDeleteபுஷ் யார்?
ஒபாமா யார்?
மன்மோகன் யார்?
அப்சல்குரு யார்?
தாலிபான் யார்?
மதவாதியார்?
மதவெறியர் யார்?
ஜனநாயகவாதி யார்?
பாசிஸ்ட் யார்?
...என்று
உங்களுக்கு எதுவும்
புரியப்போவதும் இல்லை
நீங்கள் எதையும்
புரிந்துகொள்ளப்போவதும் இல்லை.
இக்பால் செல்வன்,
ReplyDeleteஉங்களது கருத்துக்களை சொல்ல ஜனநாயக நாட்டில் உரிமை இருக்கிறது. 9/11 என்பது அமெரிக்க அரசாங்கமே நடத்திய நாடகம் என்று அமெரிக்காவில் திரைப்படமே வெளிவருகிறது. அதற்கான உரிமை இருக்கிறது. facts என்பது வேறு opinion என்பது வேறு.
இந்த அப்ஸல் குரு அப்பாவி என்பதெல்லாம் கொஞ்சம் டூ மச். அதனை அப்ஸல் குருவே ஒப்புகொள்ள மாட்டார்.
அப்ஸல் குரு கொடுத்த பேட்டி, வாக்குமூலம் அல்ல, பேட்டியில் எந்த விதமான மனக்கிலேசமும் இல்லாமல் எப்படிபாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டோம், யார் உதவி செய்தார்கள், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது என்பதெல்லாம் விலாவாரியாக விவரித்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=9zJcFO8VvqA
http://indiatoday.intoday.in/video/mohamammed-afzal-guru-pranab-mukherjee-parliament-attack-case/1/249612.html
இதற்கு அப்புறமும் அப்பாவி கிப்பாவி என்றால் என்ன செய்யமுடியும்?
SAR Gilani என்பவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. காரணம் என்ன தெரியுமா? அவர் பயங்கரவாத செயலில் ஈடுபட்டிருந்தார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டாலும், அவரது தொலைபேசியை ஒட்டுக்கேட்பதற்கு முன்னால், கோர்ட்டிடம் அனுமதி பெறவில்லை என்ற technical காரணம் காரணமாக விடுதலை செய்தது. இதனை தீர்ப்பிலும் குறிப்பிட்டிருக்கிறது.
திரும்ப சொல்கிறேன். தூக்குதண்டனை கூடுமா கூடாதா என்பது வேறு விவாதம். ஆனால் இவர் அப்பாவியா அல்லவா என்பது விவாதத்துக்குரியதல்ல. இவர் பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
முகம்மது ஆஸிக் போன்றவர்கள், சஹா போன்றவர்கள் தங்களது சமூகத்தை இந்திய அரசாங்கத்துக்கு எதிராக திருப்பி இந்துக்களை ஜிகாதில் கொல்லும் புனிதபணியில் இருப்பவர்கள். அவர்கள் புளுகித்தள்ளுவது புரிந்துகொள்ளக்கூடியது. உங்களுக்கு என்ன ஆயிற்று?
@ nila nilavan
Delete//முகம்மது ஆஸிக் போன்றவர்கள், சஹா போன்றவர்கள் தங்களது சமூகத்தை இந்திய அரசாங்கத்துக்கு எதிராக திருப்பி இந்துக்களை ஜிகாதில் கொல்லும் புனிதபணியில் இருப்பவர்கள்.//
யார் நீ? நீ இக்கருத்திற்கு ஆதாரம் தரவில்லை என்றால், அவதூறு வழக்கை சந்திக்க நேரிடும். உன்னை போன்ற வெட்டி ---- களுக்கு பதில் சொல்லிகொண்டிருப்பது தவறா? மன்னிப்பு கேள், கருத்தை நீக்கு, இல்லையேல் எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு வழக்கு தொடரப்படும்.
சஹாவுக்கு பயங்கர காமெடி சென்ஸ் இருக்கும் போல... முதல்ல போயி உங்க பீபீ ஜே மேல கேஸ் போடுங்க!
Delete@ nila nilavan
Delete@ நந்தவனத்தான்
உங்களை எல்லாம் ஒரு மனுசனா மதிச்சு பதில் சொன்னா காமடியாத்தான் தெரியும். யாரப்பாத்து இந்தியாவுக்கு எதிரா செயல்படுறேன்னு சொல்ற? உன்ன மாதிரி வெறி பிடிச்சு அலையும் கூட்டத்தோட நோக்கம் என்னன்னு இப்ப தெளிவா புரிஞ்சிடுச்சு. ஆட்டக்கடிச்சு, மாட்டக்கடிச்சு கடைசியா மனுசன கடிக்க அலையிரியா? ஆக்கப்பூர்வமா விவாதத்திற்கு வருபவர்களை இந்தியாவுக்கு எதிரா செயல்படுரோம்னு முத்திரை குத்தி, தனிமைப்படுத்திவிட்டு, சமூகத்தில் மேலும் பிளவை உண்டாக்கி, இன வெறியை தூண்டிவிட்டு அதன் மூலம் பலனடைய நினைக்கும் நரிக்கூட்டத்தின் சூழ்ச்சிகள் புரிகின்றன. ச்சீ... மானங்கெட்டவர்களே... இந்த வேலை பார்ப்பதற்கு --- வேலை பார்க்கலாம்.
உன்னை போன்றோருடனான விவாதம், விழலுக்கு இறைத்த நீர்.
இஸ்லாமிய நண்பர்களே,
ReplyDeleteராஜீவ் கொல்லப்பட்டது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அதற்கு ஈழ மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இந்திய இறையாமையின் அடிப்படையில் அது தவறாக இருக்கலாம். இதில் பேரறிவாளன் அப்பாவி. அப்சல் குரு கொல்லப்பட்டதற்காக அவரையும் கொல் என்பது மனிதத்தன்மையற்ற பேச்சு.
அப்சல் கொலையை ஆதரிக்கும் நண்பர்களே. கொல்லுங்கள். நீதிமன்றத்தில் நேர்மையாக நிருபித்துவிட்டு கொல்லுங்கள். இல்லையேல் ஜனநாயக நாடு என்ற முகமூடியை எறிந்துவிட்டு கொல்லுங்கள்.
sariyaana karuththu. yetru kolgiren.
Deleteசகோ பக்கர்,
Deleteஇராஜீவின் கொலையை நியாயப் படுத்தாதீர்கள். வன்முறை என்பது யார் செய்தாலும் தவறே.
இப்போதைய சூழலில் எது சாத்தியமோ,அனைவரும் நலமாக வாழ எது செய்ய வேண்டுமோ அதைப் பற்றி சிந்திப்பதே உத்தமம்.
நன்றி!!
சகோ முகமது ஆஸிக், சகோ சஹா
ReplyDeleteநான் கசுமீருக்கு சுயநிர்னய உரிமை வேண்டும். அதே போல் தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களுக்கும் வேண்டும் எனவும் கூறிவிட்டேன்.கசுமீர் ஜனநாயக,மத சார்பற்ற சட்டங்களினால் மட்டுமே நிர்வாகம் செய்யப்படவும் வேண்டும். இந்நிலை உலக முழுதும் வர வேண்டும் என்வே கோருகிறோம்.
கசுமீர் பிரச்சினை தீர்வு பற்றி உங்களின் கருத்தினை கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா???
நன்றி!!!!
http://www.ndtv.com/article/india/afzal-guru-hanging-moderate-separatist-leader-yasin-malik-shares-stage-with-hafiz-saeed-in-islamabad-329393?pfrom=home-otherstories
DeleteAfzal Guru hanging: moderate separatist leader Yasin Malik shares stage with Hafiz Saeed in Islamabad
Islamabad: The Indian government is reportedly upset with a recent meeting between Yasin Malik, the chairman of the Jammu Kashmir Liberation Front (JKLF), and Hafiz Saeed, the mastermind of the 26/11 attacks in Mumbai in which 166 people were killed.
Mr Malik, a moderate Hurriyat leader, was on a hunger strike over the weekend in Islamabad in Pakistan to protest against India's hanging of Afzal Guru, a Kashmiri.
Saeed, who moves freely around Pakistan despite a 10-million dollar bounty announced by the United States, joined him on stage.!!!!!!!!!!!
Common guys get a life...
ReplyDeleteDon't try to spend your energy on a terrorist,who confessed...
He deserves to go...If he had escaped...he would have been instrumental in the next set of bomb blasts killing thousands of fellow Indians...
Yah...spend a million feeding these animals for life...That is nonsense...These animals should be putaway the moment they are caught...
I would do the same if someone tries to get into my house with malicious intentions...leave alone the Parliament...
You guys should have some nerve defending a beast like him...
இம்மாதிரி தீவரவாதிக்கு ஆதரவாக சில இசுலாமியர்கள் உட்பட பலர் கூக்குரல் எழுப்புவது வாமிட் வரத்தான் வைக்கிறது. காசுமீரின் சுதந்திர போராட்டம் என்பது வேறு தில்லியில் வந்த பாராளுமன்றத்தை தாக்குவது என்பது வேறு. இப்பிரச்சனைக்கு முக்கிய காரணமே நவீன சமயசார்பற்ற இந்தியாவின் சிற்பி என இசெ வால் போற்றப்படும் நேருதான். அந்த ஆளு ஒழுங்காக ஜின்னாவிடம் பிரதமர் பதவி விட்டுக் கொடுத்திருக்கலாம். அதை விடுத்து காசுமீர் மாதிரி பல பிரச்சனைகளை இழுத்துவிட்டுவிட்டு போய்விட்டார். உண்மையில் காசுமீர் இந்தியாவிற்கு ஒரு சுமைதான். ஏகப்பட்ட வரிப்பணம் காசுமீர் மக்களுக்கும் ஆர்மிக்கும் செலவாகிறது.
ReplyDeleteநிற்க, இது அரச சதி, உண்மையக் கண்டுபிடி என்பது நல்ல தமாசு. வீரப்பன், ஆட்டோ சங்கர் இப்படி எல்லா கேசுகளிலும் இப்படித்தான் கூக்குரல் எழுப்புகிறார்கள். இப்படி எல்லா கேசிலும் சதி கோட்பாடு என ஆரம்பித்தால் எல்லா சிறையையும் மூடிவிட்டு கைதிகளை வீட்டுக்கு அனுப்பவேண்டியதுதான்.
இப்படி சதி கோட்பாடுகளை எல்லோரும் அவிழ்த்துவிட இயலும். முமின்கள் இப்படித்தான் நியூயார்க் தாக்குதல் யூத அமெரிக்க சதி என காமடி செய்கிறார்கள். நானும் இசெயினால் மதசார்பற்ற விடுதலை இயக்கம் என வர்ணிக்கப்பட்ட JKLF இந்தியாவை மேலும் பிளக்க பிரிட்டிஷ் சதி என குற்றம் சாட்ட இயலும். JKLF இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். ஆரம்பித்தவர்களுள் ஒருவரான மக்பூல் பட் ஏற்கனவே தீவிரவாதத்தில் ஈடுபட்டு தூக்கிலிடப்பட்டவர். மேலும் சகோ சார்வாகன் குறிப்பிட்டது போல் அந்த இயக்கத்தில் ஒரு பிரிவு தலைவரான யாசின் மாலிக் லக்சர் தீவிரவாதியும் மும்பாய் தாக்குதல் நடத்தியவனுமான சயித்துடன் உண்ணாவிரதம் இருக்கிறான். ஆனால் இந்த இயக்கத்தவர் மிகவும் நல்லவர்கள் என இசெ எழுதுகிறார். இங்கு வந்து சில வகாபிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் வாந்தி எடுகிறார்கள். சகோ தனது நடுநிலைமையை நிறுவதற்காக நடுநிலைமை தவறி ஒருதலைபட்சமாக இசெ இட்ட பதிவு என்பதாகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன். இங்கு நடுநிலைமையோடு நான் காணும் ஒருவர் சார்வாகனே!
ஆமா ஆமா நடு நிலை என்பது ஹிந்துத்வ வாந்தி எடுப்பது
Deleteசகோ இராஜன்,
Deleteசவுதி வஹாபி வாந்தியா??
ஹிந்துத்வ வாந்தியா??
சரியான போட்டி!!!
நன்றி!!
"சிந்திக்க மாட்டீர்களா??!!!!!!!!!!!!!!!!!!!!!!" மற்றும் "எதையும் கேள்வி கேட்க வேண்டும்" என்று சொல்லும் சார்வாகனின் முதல் பின்னூட்டம்,
ReplyDelete//பாமர மக்களாகிய நாம் ஊடகங்கள் மூலமாக மட்டுமே செய்திகளை அறிகிறோம். பாராளுமன்ற தாக்குதல் வழக்கு குறித்தோ, அதன் த்கவல்களின் நம்பகத் த்னமை குறித்தோ நம்மால் சரிபார்க்க இயலாது என்பதே உண்மை.
ஆகவே நீதிமன்ற தீர்ப்பின் படி அஃப்சல் குரு குற்றவாளி என்பதை ஏற்கிறேன்.//
சிந்திப்பது என்றால் என்ன உடனே அப்சல் குருவை பற்றி கேட்டதும் சார்வாகன் சேம்சுபாண்டு மாதிரி உடனே போய் துப்பறிந்து உண்மைகளை அறிய வேண்டுமா? பத்தரிக்கைளில் படித்த செய்திகளின் அடிப்படையிலும் உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் அவர் அப்சல் குருவை குற்றவாளி என கருதுகிறார். இதிலென்ன தவறு?
Deleteமுசுலிம் என்ற ஒரே காரணத்திற்காக என்ன செய்தாலும் ஆதரிப்பீர்கள். ஆனால் இசுலாம் தீவிரவாதி என்றால் மட்டும் உங்களுக்கு கசுக்கும்.
சார்வாகன் போன்றோர் நிகழ்ச்சிக்கு ஏற்ப நிலை எடுப்பவர்கள் அவர்களை கண்டால் உமக்கு இந்துத்தவா எனத் தோன்றும்.... இதுவரை இந்துதுவாக இருந்த இசெ இக்கட்டுரை எழுதியதும் நடுநிலையாளர்.
//பத்தரிக்கைளில் படித்த செய்திகளின் அடிப்படையிலும் உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் அவர் அப்சல் குருவை குற்றவாளி என கருதுகிறார்.//
ReplyDeleteஓ இதுதான் நீங்கள் சிந்திக்கும், கேள்வி கேட்கும் இலட்சனமா ?
சமீபத்தில் 'நீயா நானா' வில் வந்த கல்லூரி மாணவர்கள் பரவாயில்லை போல.
சகோ இராஜன்,
Deleteநான் என் நிலைப்பாட்டில் தெளிவாக உறுதியாகவே இருக்கிறேன்.
உங்களது நிலைப்பாடு என்ன என கூறினால் நலம்?
1. அஃப்சல் குரு குற்றவாளியா? ஆம்/இல்லை
இல்லை எனில் என்ன உங்களுக்கு தெரிந்த சான்றுகள்.
[ நான் நீதிம்னற சான்றுகளை ஏற்பதாக கூறிவிட்டேன்]
2. கசுமீர் பிரச்சினைக்கு தீர்வாக என்ன சொல்கிறீர்கள்??
[ சுயநிர்ணய உரிமை, கசுமீர் போல் அனைத்து மாநிலங்களும் அதிகார்ப் பகிர்வு,பரவல்,இயற்கை வளம் 75% மாநிலத்திற்கே என தீர்வு நான் சொல்லி விட்டேன்/
3. மார்க்க பந்துக்கள் வேறு பெயர்களில் விவாதிப்பது ஏன்?
கசுமீர் சுன்னி பிரிவு மூமின்கள் பெரும்பானமையாய் வாழ்வதால், தனி நாடு அல்லது ,பாகிஸ்தானுடன்தான் சேர வேண்டும் , அங்கு வாழும் இந்துக்கள்,இதர மூமின் பிரிவினரை ஒடுக்குவோம் என்பதுதானே மனதில் ஓடும் எண்ணம்.
அனைவரும் மனிதர்களே, இன,மத,மொழி பாகுபாடின்றி அனைவருக்கும் உரிமைகள்,வாழ்வாதாரம் ,சமூக பாதுகாப்பு,ஜன்நாயகம், மத சார்பற்ற மனித உரிமைச் சட்டங்கள் நோக்கிய போராட்டம் மட்டுமே ஆதரிப்போம்.இதற்கு எதிரான எதுவும் நிலைக்காது என்பதே வரலாறு சொல்லும் பாடம்!!!
நன்றி!!!
ஒரே ஒரு புஸ்தகத்தை தாண்டி சிந்திக்காமல் 8-ம் நூற்றாண்டினை நோக்கி ஓடும் நீங்க எங்களை குறை சொல்கிறீர்கள்... என்ன கொடுமை சரவணன்?
Delete//இல்லையேல் எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு வழக்கு தொடரப்படும். //
ReplyDeleteநிச்சயமாக காமெடிதான். அப்ஸல் குருவுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த தண்டனையை கேள்வி கேட்பவர்களுக்கு இந்திய சட்டத்தின் மீதோ, அதன் வழிமுறைகள் மீதோ, இந்திய அரசியலமைப்பு மீதோ என்ன மரியாதை இருக்கிறது? வினவுக்கும், இந்த இஸ்லாமிஸ்டுகளுக்கும் ஒரே குறிக்கோள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் அதன் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமரியாதை அவதூறு செய்து, அதன் மீது நம்பிக்கையின்மையை பரப்புவது. அதற்கு மாற்றாக, இஸ்லாமிய ஷரியா சர்வாதிகாரத்தை இவர்கள் நிறுத்த முனைகிறார்கள். அவர்கள் கம்யூனிஸ சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முனைகிறார்கள்.
வழக்கு போடுகிறீர்களா? போடுங்கள். எந்த நீதிமன்றத்தில்? இந்துத்துவா பாசிச பயங்கர்வாத நீதிமன்றம் என்று நீங்கள் எழுதும் உங்களுக்கு நம்பிக்கையில்லாத இந்திய நீதிமன்றத்திலா? அல்லது நீங்கள் தவறே செய்யாததாக விதந்தோதும் தூய இஸ்லாமிய சவுதி ஷரியா நீதிமன்றத்திலா?
இந்திய நீதிமன்றத்தில் வழக்கு போடுவதாக இருந்தால், அல்குவேத இஸ்லாமிஸ்டுகள் சொல்வார்களே அதே போல, “எனக்கு இந்த காபிர் நீதிமன்றத்தில் நம்பிக்கை இல்லை” என்று சொல்லிவிட்டு போடுங்கள்.
கேட்கிறேன். உச்ச நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பையும் அது கொடுத்த தண்டனையையும் விமர்சிக்கும் நீங்கள் எந்த நீதிமன்றத்தை மதிக்கிறீர்கள்?
நீதிமன்ற அவதூறுக்கு பதில் சொல்லிவிட்டு அதன்பிறகு உங்கள் மன உளைச்சல்(!!!)க்கு வழக்கு போடலாம்.
இந்த தொப்பி கூட்டத்தின் தொல்லை தாங்க முடியல.
Deleteதங்களுக்கு ஆதரவாக பதிவு போட்டால் அது சூப்பர் பதிவு (ஆசிக் விமர்சனம்)
இதையே இவர்களின் அக்கிரமங்களை விமர்சித்து பதிவு போட்டால் கோடங்கி கேடு கெட்டவன் என்று திட்டுவது.
நீங்கள் எல்லோரும் உத்தமர்கள். மற்றவர்கள் எல்லாம் கேடு கேட்டவர்கள்.
போங்கடா நீங்களும் உங்களுடைய வெட்டி நியாயமும்.
சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த முகம்மதுவை பின் பற்றும் உங்களுடன் என்ன நியாயத்தை பேச முடியும்.
//இந்த வேலை பார்ப்பதற்கு --- வேலை பார்க்கலாம்.//
ReplyDeleteஅதுதான் நீங்களும் உங்க குரூப்பும் பீஜே தலைமையில --- வேலை பார்க்குறீங்களே, பத்ததா? எங்களையும் எதுக்கு கூப்படுறீங்க சஹா?
இக்பால் செல்வன் தான் இரக்கம் காரணமாக கண்ணை மூடிகிட்டு அப்சல் குரு பயங்கரவாதிக்காக கவலைபடுகிறார் என்றால் ஜிகாத்டிஸ்டுகளுமல்லவா கண்ணீர் சிந்துகிறார்கள்!!! ஜிகாத்டிஸ்டுகள் கண்ணீர் சிந்தலாமா?
ReplyDeleteஏட்டுச் சுரைக்காய் கரிக்கு உதவாது என்பதிற்கு ஆக சிறந்த ஒரு விளக்கம் கொடுக்கபட வேண்டும் என்றால் அது சகோ சார்வாகன் சொன்ன மாதிரி தேசிய இனத்தின் இறையாண்மை சுய நிர்ணய உரிமை தான். சிங்கப்பூர் தைவான் லக்சம்பேர்க் சுவிசர்லாந்து விதிவிலக்காக நன்றாக இருக்கின்றன என்றால் அவை இஸ்லாமி நாடுகள் கிடையாது.அவை இஸ்லாமி நாடுகளாக இருந்திருந்தால் தாங்களும் கெட்டு மற்ற நாடுகளுக்கும் தீங்குகள் செய்ய பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து கொண்டிருப்பார்கள். காஷ்மீர் என்ற ஒரு இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்பதிற்காக இப்போ தமிழ்மண முமீன்கள் இலங்கை தமிழ் இனம் ஈழ மக்கள் என்று போலிபாசம் கொட்ட தொடங்கியுள்ளனர். இது அவர்களின்தந்திரரோபாய நடவடிக்கையே. இந்தியாவை பிரதான எதிரியாக்கி தமிழகத்தில் காஷ்மீர் என்ற ஒரு இஸ்லாமிய நாட்டை உருவாக்க ஆதரவை பெறுவதே நோக்கம்.
//ராஜீவ் கொல்லப்பட்டது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அதற்கு ஈழ மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது//
ஈழ மக்கள் இஸ்லாமியர்கள் கிடையாது அவர்கள் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்லு என்கின்ற பழிவாங்கும் ஷரியா சட்டத்தை பின்பற்றுபவர்கள் இல்லை. இவர்கள் எதிர்பர்ப்பது அப்சல் குருவுக்கு இந்தியாவில் பயங்கரவாதம் செய்ய உரிமை உள்ளது ஆகவே உங்களுக்கு தண்டிக்கும் உரிமை கிடையாது இஸ்லாமிய பயங்கரவாதியை ஆதரித்து எழுதுதல் நடு நிலமை.
மதம் சார்ந்த, கொள்கைவாதம் சார்ந்த எந்த நாடுகளும் முன்னேற்றம் காணாது என்பது உண்மையே ... ! கஸ்மீரிகளின் சுய நிர்ணய உரிமையை நான் முற்றாக ஆதரிக்கின்றேன், அதே சமயம் இஸ்லாமியவாதம் தலையெடுப்பதை முற்றாக எதிர்க்கின்றேன் ... இது உலகின் சகல இன மக்களுக்கும் பொருந்தும். இதே நிலைப்பாடு குர்திஸ்தான், ஈழத் தமிழர், திபெத்தியர் என அனைவருக்கும் நான் பொருத்திப் பார்க்கின்றேன்.
Deleteசார்வாகன்,
ReplyDelete//சவுதி வஹாபி வாந்தியா??
ஹிந்துத்வ வாந்தியா??
சரியான போட்டி!!!//
அதேதான், இப்ப இப்பிடி இருக்குறது
சவுதி வஹாபி வாந்தி>ஹிந்துத்வ வாந்தி
ஒங்கள மாதிரி சிந்திக்கிறவங்களால இப்பிடி ஆயிடும்
சவுதி வஹாபி வாந்தி=ஹிந்துத்வ வாந்தி
சகோ இராஜன்,
Deleteகொஞ்சம் மூமின் சட்டம், இஸ்லாமிய பெரும்பானமை நாடுகளில் வாழும் சிறுபானமையோர் நிலை பற்றி தகவல் சேகரித்து பாருங்கள்.
ஜன்நாயக நிர்வாகத்தில் மூமின்களுக்கு நட்டம் இல்லை. ஆனால் ஷரியா ஆட்சியில் காஃபிர்கள் இல்லாமல் போவார்கள்!!!
அப்படி ஒரு நாடாக கசுமீர் மாறக்கூடாது என்பதால் மட்டுமே ,அனைவருக்கும் பொருந்தும் சுமுக தீர்வு காண முயல்கிறோம்.
இதே சூழல் நம்க்கும் எதிர்காலத்தில் வரலாம்!!.
இரு மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மை சாதி நாடு கேட்டால் கொடுக்கலாமா?. வாக்கெடுப்பு நடத்தினால் அச்சாதியே வெற்றி பெறும்.அப்புறம் அங்கே ஒடுக்குமுறை என் இன்னும் பிரிப்பதா..........
மொத்தம் எத்தனை நாடாக வேண்டும்?
**
என்ன சொல்ல வருகிறோம்!!
உலகே ஒரு நாடாக வேண்டும்.
ஓவொருவருக்கும் வாழ்வாதாரம் சமூக பாதுகாப்பு வேண்டும் என முயற்சிக்காமல் மத்வாதிகளின் தந்திரங்களுக்கு துணை போவது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நல்ல எதிர்காலத்தை உலகிற்கு தராது!!
நன்றி!!
சார்வாகன்,
ReplyDelete//3. மார்க்க பந்துக்கள் வேறு பெயர்களில் விவாதிப்பது ஏன்?//
இப்பிடியே மனசாட்சிப்படி கேள்வி கேக்கறவங்களுக்கும் பச்ச கண்ணாடி மாட்டி உடுங்க, உருப்படும்.
சகோ இராஜன்,
Deleteநீங்கள் மார்க்க பந்துவாக இல்லாத பட்சத்தில், ஆகும் வாய்ப்பு உள்ளவர்தானே. காஃபிர் மூமின் ஆவது பெருமையே.
ஒரு அருமையாக ஷரியா ஆதரவு பதிவு படித்து ஏக இறைவனின் சட்டத்தை உலக முழுதும் அமல்படுத்து உதவுங்கள்!!
நம்ம டீக்கடை சிராசு சகோ பதிவு போட்டு இருக்காங்க!!
ஆசிட் ஊத்தினா பதிலுக்கு ஆசிட் ஊத்தனுமாம்!!!
http://vadaibajji.blogspot.com/2013/02/blog-post_12.html
/என்ன செய்யப்போகிறது அரசு??? தெரியவில்லை...
ஆனால், என்னை பொறுத்த வரையில் இதற்கு சரியான தீர்வு சுரேஷ் என்ற அந்த குற்றவாளியின் மூஞ்சியில் மீண்டும் ஆசிட் ஊற்ற வேண்டும். ஜெயிலில் போட்டு சாப்பாடு போடுவது ஒரு போதும் தீர்வாகாது. இது போன்ற சம்பவங்கள் குறைய வேண்டும் என்றால், குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் வர வேண்டும்... செய்தால் நாமும் அதே போல் செய்யப்படுவோம் என்ற அச்சம் வர வேண்டும். அதற்கு "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்ற சட்டம் தான் சரி வரும்.
ஆகவே அந்த பெண் மற்றும் அவரின் உறவினர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அவன் மூகத்தில் ஆசிட் ஊற்ற வேண்டும்.. ஆசிட் ஊற்றியும் அவன் கண் பார்வை பறி போகாவிட்டால், அவன் கண் பார்வையையும் பறிக்க வேண்டும்.. அந்த பெண் அனுபவித்த வேதனையை அவன் வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டும் அல்லது இதே போல் 3 மாதத்தில் மூச்சுத் திணறல் வந்து சாக வேண்டும். இவன் இருந்து இந்த உலகத்திற்கு எதுவும் செய்யப் போவது இல்லை.
இதற்கு சட்டத்தில் இடம் இல்லாவிட்டால் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டும்... பாதிக்கப்பட்டவனின் பார்வையில் இருந்து குற்றத்தை அணுகுவதே சரியான தீர்வாக இருக்க முடியும். அவர்கள் வயிறு எறிந்து
இருக்கிறார்கள். அரசே!! அவரின் குடுபத்தாரின் வயிரை குளிர வை. இல்லை இல்லை 6 மாசம் ஜெயில் தான் தருவேன் என்றால் தாராளமாக ஜெயில் தண்டனை கொடுங்கள்.../
ஏக இறைவன் அடியார்களிடம் இருந்து உலகைக் காக்க ஏக இறைவனால் கூட முடியாது போல் தெரிகிறெதே!!
இருந்தாலும்
ஏக இறைவன் மிக மிக பெரியவன்!!!
நன்றி!!!
Mr. Rajan(moobine) , we all know very well kafir conscience .kafirs never see the world through religion. please don't use kafir's names. moobins changing theire names to get passports for go kafir's countries illeagally.
ReplyDeleteரேமினேற்றர் காபிர் பெயரில் வந்த முமீனை சரியான காரணத்தை வைத்து கண்டு பிடித்து விட்டார்.அவங்க மதம் பொய் சொல்ல அனுமதிக்கிறது.
Deleteஇந்த தொப்பி கூட்டத்தின் தொல்லை தாங்க முடியல.
ReplyDeleteதங்களுக்கு ஆதரவாக பதிவு போட்டால் அது சூப்பர் பதிவு (ஆசிக் விமர்சனம்)
இதையே இவர்களின் அக்கிரமங்களை விமர்சித்து பதிவு போட்டால் கோடங்கி கேடு கெட்டவன் என்று திட்டுவது.
நீங்கள் எல்லோரும் உத்தமர்கள். மற்றவர்கள் எல்லாம் கேடு கேட்டவர்கள்.
போங்கடா நீங்களும் உங்களுடைய வெட்டி நியாயமும்.
சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த முகம்மதுவை பின் பற்றும் உங்களுடன் என்ன நியாயத்தை பேச முடியும்.
சார்வாகன்
ReplyDelete//நீங்கள் மார்க்க பந்துவாக இல்லாத பட்சத்தில், ஆகும் வாய்ப்பு உள்ளவர்தானே. காஃபிர் மூமின் ஆவது பெருமையே.//
நோ தேங்க்ஸ், காஃபிராகவே வாழ்ந்துவிட்டு போகிறேன் (கொஞ்சம் மனிதத்தோடு)
//நம்ம டீக்கடை சிராசு சகோ பதிவு போட்டு இருக்காங்க!!
ஆசிட் ஊத்தினா பதிலுக்கு ஆசிட் ஊத்தனுமாம்!!!
http://vadaibajji.blogspot.com/2013/02/blog-post_12.html//
தல வெட்டுறத 'ஹவ் ஸ்வீட்' என்று கொண்டாடுனவர் தானே, இவங்கிட்ட காருண்ணியத்தயா எதிர்பார்க்க முடியும்.
//selvakumarFebruary 11, 2013 7:02 PM
ReplyDeleteகசுமீர் இருக்கும் வாய்ப்புகளில் பாகிஸ்தானை விட,இந்தியாவுடன் இணைந்து இருப்பதே நலம்------
ஆக ....அருமையான கருத்து.. இந்த கருத்து உங்களுக்கு மட்டுமில்லை இங்கிருக்கும் பெரும்பான்மையான (ஹிந்து) மக்களுக்கு மிருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை//
பெரும்பான்மையான ஹிந்துக்கள் மட்டுமில்லைங்க. சுதந்திரத்தையும் அமைதியான வாழ்கையை விரும்பும் காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்கள் அதே மாதிரியான இந்திய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்து இருப்பதையே விரும்புகிறார்கள்.
சகோ சார்வாகன் , புலியின் பதிவு ஒன்றில் உங்க பின்னோட்டம் கண்டேன்.
ReplyDelete//யாருக்கும் ஈழம்ஈழ தமிழர் பற்றி அக்கரை கிடையாது. வல்லரசுகளின் போட்டியில் பலிகடா ஆகும் பிரச்சினை மட்டுமே!!.தமிழர்களின் குறைந்த பட்ச தீர்வு சுயநிர்ணய உரிமை!! என்பதை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.//
எந்த வித பயனுமற்ற ஒன்றை யார் கண்டுக்க போறாங்க. கனடாவில் வாழும் புலிகள் கனடாவை விட்டு போகவே மாட்டாங்க. கனடா அவ்வளவு பிடித்திருக்கிறது. கனடா சுயநிர்ணய உரிமையா புலிகளுக்கு கொடுத்திருக்கிறது:) இலங்கையில் தமிழர்கள் சமத்துவத்துடன் நியாயமாக வாழும் நடைமுறை உறுதிப்படுத்தபட வேண்டும். சுயநிர்ணய உரிமை என்பது வல்லரசுகள் ஒரு நாட்டை தங்கள் தேவைக்கு சீரழத்து சின்னாபின்னமாக்க மட்டுமே பயன்படும்.